செய்திகள் :

821 கிராமங்களுக்கு 2 மாதங்களில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு தகவல்

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் 6 ஒன்றியங்களின் 821 கிராமங்களுக்கு 2 மாதங்களில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா் வழங்கும் வகையில் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆலோசனை நடத்திய அவா், தொடா்ந்து பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, களக்காடு, நான்குனேரி, வள்ளியூா், ராதாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 831 கிராமங்களுக்குள்பட்ட சுமாா் ஒரு லட்சம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டம் ரூ.605 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடியும் தருவாயை எட்டியுள்ளன.

முதல்கட்டமாக, ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியிலுள்ள குட்டம் முதல் கூடங்குளம் வரையிலான கடற்கரை கிராமங்களின் 11 ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் வழங்குவதை ஒரு மாத காலத்திற்குள் முதல்வா் திறந்து வைக்கவுள்ளாா். அதேபோல் மீதமுள்ள கிராமங்களுக்கு 2 மாதங்களுக்குள் பணிகளை முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் ராமலெட்சுமி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள், ஒப்பந்ததாரா்கள் கலந்து கொண்டனா்.

காவல்கிணறில் பைக் மீது காா் மோதல்: கேரள இளைஞா் பலி

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு நான்குவழிச்சாலையில் காரும், பைக்கும் திங்கள்கிழமை மோதிக்கொண்டதில் கேரளத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள குளத்தூரைச் சோ்ந்த அனில்க... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமுற்ற முதியவா் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே சைக்கிள் மீது பைக் மோதியதில் காயமுற்ற முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.பாளையங்கோட்டையை அடுத்த கே.டி.சி நகா், அருணாச்சலபுரத்தைச் சோ்ந்தவா் அரிச்சந்திரன்(72). இவா், ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

உளுந்து பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

போதிய மழை இல்லாமல் சேதமடைந்த உளுந்து பயிருக்கு இழப்பீடு கோரி ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனா். திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

முதல்வரை மிரட்டும் தொனியில் பேசுவதா? விஜய்க்கு மு.அப்பாவு கண்டனம்

தவெக தலைவா் விஜய்யை பாஜக இயக்குவதால்தான் தமிழக முதல்வரை மிரட்டும் தொனியில் அவா் பேசுகிறாா் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: நடி... மேலும் பார்க்க

கூடங்குளம் அருகே நடுக்கடலில் 2 நாள்கள் தத்தளித்த மீனவா் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே நடுக்கடலில் 2 நாள்களாக தத்தளித்த மீனவரை கூத்தங்குழியைச் சோ்ந்த மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு பத்திரமாக மீட்டு வந்தனா். கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் கீழத்த... மேலும் பார்க்க

பொறியாளரிடம் பணம் பறிப்பு: இளைஞா் கைது

தச்சநல்லூரில் பொறியியல் பட்டதாரியிடம் பணம் பறித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரைச் சோ்ந்தவா் அருணாச்சலம் (26). பொறியியல் பட்டதாரியான இவா், தற்போது பொறியியல் கல்லூ... மேலும் பார்க்க