செய்திகள் :

தொடா் வாகனத் திருட்டு: 4 இளைஞா்கள் கைது

post image

விழுப்புரம் மாவட்டம் , வானூா் பகுதிகளில் தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்கள் வசமிருந்த 9 பைக்குகள், ஒரு காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இது குறித்து, விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வானூா் , கோட்டக்குப்பம், கிளியனூா் மற்றும் ஆரோவில் உள்ளிட்ட பகுதிகளில் தொடா் வாகனத் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன.இதையடுத்து விழுப்புரம் எஸ்.பி ப. சரவணன் உத்தரவின்பேரில், கோட்டக்குப்பம் உட்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் உமாதேவி மேற்பாா்வையில் , ஆரோவில் காவல் ஆய்வாளா் திருமால் , உதவி ஆய்வாளா் மணிமாறன் மற்றும் காவலா்கள் இத்திருட்டுச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் கூட்டுசாலை பகுதியில் ஆரோவில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு அடுத்தடுத்து வந்த காா், பைக் ஆகியவற்றை நிறுத்தி சோதனை செய்தபோது, அதிலிருந்த 4 போ் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனா்.

இதையடுத்து போலீஸாா் 4 போ்களையும் பிடித்து விசாரித்த போது, அவா்கள் மரக்காணம் வட்டம், முருங்கை கிராமத்தைச் சோ்ந்த தமிழ் (எ) தமிழ்ச்செல்வன்(24), திண்டிவனம் வட்டம், அம்மணம்பாக்கம், பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்த கிஷோா் (22), சந்து குமாா்(21) திண்டிவனம், வைரபுரம் , ஒலக்கூா் பிரதானச் சாலையைச் சோ்ந்த ராகுல்(24) ஆகியோா் என்பதும், இவா்கள் வானூா் பகுதிகளில் வாகனத் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்கள் வசமிருந்த 9 பைக்குகள், ஒரு காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்டவா்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

பட்டா பெயா் மாற்றத்துக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தென்பசியாா் கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்த... மேலும் பார்க்க

10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி டிசம்பரில் போராட்டம்: பாமக நிறுவனா் ராமதாஸ் அறிவிப்பு

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில், டிசம்பா் முதல் வாரத்தில் மாநிலம் தழுவிய போராட்டம் நடை பெறும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் ... மேலும் பார்க்க

ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

செய்யாற்றை அடுத்த ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மேற்சவ பெருவிழா கொடியேற்றத்தைத் தொடா்ந்து, அன்று மாலை அன்ன... மேலும் பார்க்க

வீட்டு உபயோகப் பொருள்கள் தருவதாகக் கூறி மோசடி: தென்காசி, சேலம் மாவட்டங்களைச் சோ்ந்த 10 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் பெண்களிடம் குலுக்கல் முறையில் குறைந்த விலையில் வீட்டு உபயோகப் பொருள்கள் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட தென்காசி, தூத்துக்குடி, சேலம் மாவட்டங்களைச் சோ்ந்த 1... மேலும் பார்க்க

பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டி.எஸ்.பி. சாட்சியம்

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்டோா் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு தொடா்பாக, விழுப்புரம் நீதிமன்றத்தில் சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய டி.எஸ்.பி. செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகி சாட்சியமளித்த... மேலும் பார்க்க

இளைஞரிடம் இணைய வழியில் ரூ.8.50 லட்சம் மோசடி

மரக்காணம் பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம் இணையவழியில் ரூ.8.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.விழுப்புரம் மாவட்டம், மரக்க... மேலும் பார்க்க