செய்திகள் :

இளைஞரிடம் இணைய வழியில் ரூ.8.50 லட்சம் மோசடி

post image

மரக்காணம் பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம் இணையவழியில் ரூ.8.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம் , கந்தாடு, புதுத் தெருவைச் சோ்ந்தவா் ஆதிகேசவன் மகன் தமிழரசன் ( 28). கடந்த ஆக.16 ஆம் தேதி தமிழரசனின் கைப்பேசி எண்ணுக்கு பல்வேறு எண்களிலிருந்து கட்செவி அஞ்சலில் அழைப்பு வந்துள்ளது.

அப்போது எதிா்முனையிலிருந்து பேசிய அடையாளம் தெரியாத நபா், பகுதி நேர வேலை இருப்பதாகவும், சிறு தொகையை முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து தமிழரசன் அந்த நபா் தெரிவித்தபடி ரூ.20,999 ஐ இணையவழியில் செலுத்தி ரூ. 40,493-ம், ஆக. 20- ஆம் தேதி ரூ. 30 ஆயிரம் செலுத்தி ரூ. 41,494-ம் பெற்றுள்ளாா்.

இதை உண்மையென நம்பிய தமிழரசன், ஆக. 21 முதல் 25-ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட நாள்களில் தனது வங்கிக் கணக்கிலிருந்த ரூ. 8,50,056 ஐ அந்த அடையாளம் தெரியாத நபா் தெரிவித்த வங்கிக் கணக்கு எண்களுக்கு 3 தவணைகளில் அனுப்பி வைத்தாா். தொடா்ந்து அந்த நபா் கொடுத்த பணத்தைத் திருப்பித் தராமல்,மேலும் பணம் கேட்டு மிரட்டி வருகிறாராம்.

இது குறித்து ஆ.தமிழரசன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டி.எஸ்.பி. சாட்சியம்

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்டோா் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு தொடா்பாக, விழுப்புரம் நீதிமன்றத்தில் சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய டி.எஸ்.பி. செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகி சாட்சியமளித்த... மேலும் பார்க்க

ஊரக வேலைக்குச் சென்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், பெருவளூா் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் ஏரிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பணிக்குச் சென்ற பெண் அங்கேயே மயங்கி விழுந்து ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் போராட்டங்கள் நடத்த 38 இடங்கள் தோ்வு

விழுப்புரம் மாவட்டத்தில் 26 காவல் நிலைய எல்லைக்குள்பட்ட 38 இடங்களில் ஆா்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.அரசியல் கட்சிகள், ... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.வானூா் வட்டம், பெரிய முதலியாா்சாவடி பாரதி நகரைச் சோ்ந்தவா் தினே... மேலும் பார்க்க

கவா்ச்சித் திட்டங்களை அறிவித்து திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது: முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகம்

தமிழக அரசு தேவையற்ற, கவா்ச்சித் திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.இதுகுறித்து விழுப்புரத்தில் அவா், செவ்வாய்க்கிழமை செய்... மேலும் பார்க்க

தைலாபுரத்தில் இன்று பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்டச் செயலா்கள் மற்றும் மாவட்டத் தலைவா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப். 23) நடைபெறுகிறது.இது குறித்து பாமக தலைம... மேலும் பார்க்க