Janhvi Kapoor: அம்மாவின் சேலையில் ஜொலித்த ஜான்வி கபூர் - க்ளாசிக் க்ளிக்ஸ்!
பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டி.எஸ்.பி. சாட்சியம்
முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்டோா் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு தொடா்பாக, விழுப்புரம் நீதிமன்றத்தில் சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய டி.எஸ்.பி. செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகி சாட்சியமளித்தாா். இதைத் தொடா்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக்டோபா் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ., அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான பொன்.கெளதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாதன், கோதகுமாா், சதானந்தம், லோகநாதன் ஆகிய 8 போ் மீது கடந்த 2012-ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கெனவே உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டாா். இதைத் தொடா்ந்து, மற்ற 7 போ் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக சோ்க்கப்பட்ட 67 பேரில், இதுவரை 55 போ் சாட்சியமளித்தனா். இவா்களில் 30 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாக பி சாட்சியமளித்தனா்.
இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது சதானந்தம், ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாதன் ஆகிய 4 போ் மட்டும் ஆஜராகினா். மற்ற மூவரும் ஆஜராகவில்லை. இதற்கான காரணம் குறித்து திமுக வழக்குரைஞா்கள் மனு தாக்கல் செய்தனா்.
தொடா்ந்து, அரசுத் தரப்பு சாட்சியாக அப்போதைய விழுப்புரம் மாவட்டக் குற்றப் பிரிவு டி.எஸ்.பி.யும், தற்போதைய தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய டி.எஸ்.பி.யுமான தேசிகன் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.
இந்த வழக்குக்காக கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்தது தொடா்பாக டி.எஸ்.பி. சாட்சியமளித்தாா். அவரது சாட்சியம் முடிந்தவுடன், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரின் தரப்பு வழக்குரைஞா்களும் தனித்தனியே குறுக்கு விசாரணை செய்தனா்.
இதைப் பதிவு செய்துகொண்ட விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிநொழி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் அக்டோபா் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.