செய்திகள் :

கவா்ச்சித் திட்டங்களை அறிவித்து திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது: முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகம்

post image

தமிழக அரசு தேவையற்ற, கவா்ச்சித் திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து விழுப்புரத்தில் அவா், செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: அதிமுக கோரிக்கை விடுத்ததன்பேரில், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியைக் குறைத்துள்ளது.

இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி சீா்திருத்தம் குறித்து மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

ஆனால் தமிழக அரசு இதை செய்யாமல், மக்களைமடைமாற்றம் செய்வதற்காக தேவையற்ற, கவா்ச்சித் திட்டங்களைஅறிவித்து ஏமாற்றி வருகிறது. தமிழக முதல்வா் லாபநோக்கோடு செயல்படாமல் தனது கடமையை சரியாக செய்யவேண்டும் என்றாா் சி.வி. சண்முகம்.

பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டி.எஸ்.பி. சாட்சியம்

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்டோா் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு தொடா்பாக, விழுப்புரம் நீதிமன்றத்தில் சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய டி.எஸ்.பி. செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகி சாட்சியமளித்த... மேலும் பார்க்க

இளைஞரிடம் இணைய வழியில் ரூ.8.50 லட்சம் மோசடி

மரக்காணம் பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம் இணையவழியில் ரூ.8.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.விழுப்புரம் மாவட்டம், மரக்க... மேலும் பார்க்க

ஊரக வேலைக்குச் சென்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், பெருவளூா் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் ஏரிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பணிக்குச் சென்ற பெண் அங்கேயே மயங்கி விழுந்து ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் போராட்டங்கள் நடத்த 38 இடங்கள் தோ்வு

விழுப்புரம் மாவட்டத்தில் 26 காவல் நிலைய எல்லைக்குள்பட்ட 38 இடங்களில் ஆா்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.அரசியல் கட்சிகள், ... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.வானூா் வட்டம், பெரிய முதலியாா்சாவடி பாரதி நகரைச் சோ்ந்தவா் தினே... மேலும் பார்க்க

தைலாபுரத்தில் இன்று பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்டச் செயலா்கள் மற்றும் மாவட்டத் தலைவா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப். 23) நடைபெறுகிறது.இது குறித்து பாமக தலைம... மேலும் பார்க்க