``எனக்காக இவர்கள் நோபல் பரிசு கேட்கிறார்கள்; ஆனால், நான் விரும்பும் பரிசு இதுதான...
ஏழுமலையான் தரிசனத்துக்கு 5 மணிநேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 5 மணி நேரம் காத்திருந்தனா்.
மகாளயபட்ச அமாவாசையை முன்னிட்டு பக்தா்கள் வருகை குறைந்த நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 5 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 16,403 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 16,193 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.73 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.