செய்திகள் :

``புல்டோசர் நடவடிக்கைக்கெதிராக நான் அளித்த தீர்ப்பு எனக்கு மன நிறைவானது'' - CJI பி.ஆர்.கவாய்

post image

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 2017-ல் ஆரம்பித்த புல்டோசர் நடவடிக்கை மெல்ல மெல்ல மத்தியப்பிரதேசம், ஹரியானா என பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கும் பரவியது.

பெண்களுக்கெதிரான குற்றங்களைச் செய்வோர், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், கேங்ஸ்டர்களின் வீடுகள், கட்டிடங்கள் ஆகியவற்றைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி வழங்குகிறோம் என்ற பெயரில் புல்டோசர்களைக் கொண்டு இடித்தது பா.ஜ.க அரசு.

ராம நவமி, ஹனுமன் ஜெயந்தி போன்ற இந்துப் பண்டிகையின்போது ஏற்படும் கலவரத்தில் ஒருபிரிவினரின் வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டன.

 புல்டோசர் நடவடிக்கை
புல்டோசர் நடவடிக்கை

ஒவ்வொரு முறை புல்டோசர் நடவடிக்கை அரங்கேறும்போதும், ஒருவர் குற்றவாளியாக இருந்தாலும் அவரைத் தண்டிப்பது நீதிமன்றத்தின் வேலை.

அதுமட்டுமல்லாமல் ஒருவர் செய்த குற்றத்துக்கு அவரின் வீட்டை இடித்து ஒரு குடும்பத்தையே வீதிக்கு கொண்டுவருவது என்பது முற்றிலும் அநீதி எனக் கண்டனக் குரல்கள் எழுந்தன.

நீதிமன்றத்தில் மனுக்களும் குவிந்தன. அவையனைத்தையும் ஒன்றாக விசாரித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கடந்த ஆண்டு நவம்பரில் அதிரடித் தீர்ப்பு வழங்கி புல்டோசர் நடவடிக்கையைத் தடுத்தது.

இந்த நிலையில், அன்று அத்தகைய தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவராக இருந்த தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், புல்டோசர் நடவடிக்கைக்கு எதிராகத் தான் தீர்ப்பானது தனக்கு மிகுந்த மனநிறைவைக் கொடுத்த தீர்ப்புகளில் ஒன்று எனக் கூறியிருக்கிறார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களின் அகாடமிக் குழு செப்டம்பர் 19-ம் தேதி நடத்திய நிகழ்ச்சியில் இது குறித்துப் பேசிய பி.ஆர். கவாய், "எங்கள் இருவருக்கும் (நீதிபதி கே.வி. விஸ்வநாதன்) மிகுந்த திருப்தியை அளித்த தீர்ப்புகளில் ஒன்று, புல்டோசர் நடவடிக்கைக்கு எதிரான தீர்ப்பு.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் (BR Gavai)
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் (BR Gavai)

தீர்ப்பின் ஆன்மாவானது மனிதன் எதிர்கொள்ளும் பிரச்னை. குற்றவாளி அல்லது குற்றம்சாட்டப்பட்டவர் குடும்ப உறுப்பினர்களின் ஒருவராக இருப்பதால் அந்தக் குடும்பமே துன்புறுத்தப்படுகிறது.

இந்தத் தீர்ப்பின் பெருமை முழுமையாக எனக்கு வந்தாலும், தீர்ப்பை எழுதியதில் சமமான பெருமை நீதிபதி விஸ்வநாதனுக்கும் சேர வேண்டும்" என்று கூறினார்.

ஆறு மாதங்களாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சிறப்பாகச் செயல்பட்டுவரும் பி.ஆர். கவாய் அடுத்த மாதம் ஓய்வுபெறவிருக்கிறார்.

புல்டோசர் நடவடிக்கைக்கெதிரான தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

* அதிகாரி ஒருவரைக் குற்றவாளி எனத் தீர்மானிக்க முடியாது.

* குற்றவாளியாக இருந்தாலும், சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட முறையான நடைமுறையைப் பின்பற்றாமல் இடிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது.

புல்டோசர் நடவடிக்கை
புல்டோசர் நடவடிக்கை

* குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வீடு அல்லது கடைகளைத் தான்தோன்றித்தனமாக அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்தால், அது சட்டமீறலாகவும், நீதிமன்ற அவமதிப்பாகவும் கருதப்பட்டு, அபராதத் தொகையை அவர்கள் சம்பளத்திலிருந்து பிடித்து, வீட்டை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

இவற்றுடன் வழிகாட்டுதல்களையும் உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது.

அதானி நிறுவன வழக்கு: ஊடகங்களை வாயடைக்கச் சொல்லும் நீதிமன்றமும் அமைச்சகமும்! ஜனநாயகத்திற்கான சவாலா?

கார்ப்பரேட் கரங்கள் எதையும் வளைப்பதற்கு நீளக்கூடியவை – நீதியைக் கூட. இதற்கு ‘ஐ விட்னஸ்’ சாட்சியாகப் பல வழக்குகள், தீர்ப்புகள் இருக்கின்றன. தற்போது வந்துள்ள ஒரு நீதிமன்றத் தடையாணை, "இவ்வளவு அப்பட்டமாகவ... மேலும் பார்க்க

போலீஸ் விசாரணையின்போது CCTV கட்; AI மூலம் தீர்வு - உச்ச நீதிமன்றம் யோசனை!

காவல் நிலையங்களில் பயன்படாத CCTV கேமராக்களை கண்காணிப்பதற்காக முழுமையான தானியங்கி கட்டுப்பாட்டு அறைகளை அமைப்பது குறித்து பரிசீலித்துவருவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.நீதிபதிகள் விக்ரம் நாத் ம... மேலும் பார்க்க

Waqf Bill 2025: `முழுமையாக தடை விதிக்க முடியது; ஆனால்.!’ - உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதா 2025-ஐ பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியிருக்கிறது. இந்த விவகாரத்தில், `சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் பாஜக அ... மேலும் பார்க்க

நற்பெயருக்கு களங்கம்: ஐஸ்வர்யா ராய் பெயர், படங்களை சட்டவிரோதமாக பயன்படுத்த தடை - கூகுளுக்கு உத்தரவு!

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்களை அவரது அனுமதி இல்லாமல் சிலர் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றனர். அவரது புகைப்படத்தை ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் மாற்றி அதனை டிசர்ட், கப் போன்றவற்றில் கூட பயன்... மேலும் பார்க்க

``மாநிலப் பிரச்னைகளைத் தீர்க்க சுப்ரீம் கோர்ட் ஒன்றும் ஹெட்மாஸ்டர் கிடையாது'' - மத்திய அரசு வாதம்

மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பதவியில் இருக்கும் ஆளுநர்கள் மாநில அமைச்சரவை அனுப்பும் மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிப்பதாக எதிர்க்கட்ச... மேலும் பார்க்க

Judiciary: ``நீதித்துறையில் பாலின சமத்துவம் வேண்டும்'' - இந்திய வழக்கறிஞர்கள் கவுன்சில் சொல்வதென்ன?

நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி (Vipul Manubhai Pancholi) குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக அக்டோபர் 1, 2014 அன்று பதவியேற்றார்.பின்னர் ஜூலை 24, 2023 அன்று பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். ஆகஸ... மேலும் பார்க்க