செய்திகள் :

Waqf Bill 2025: `முழுமையாக தடை விதிக்க முடியது; ஆனால்.!’ - உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

post image

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதா 2025-ஐ பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியிருக்கிறது.

இந்த விவகாரத்தில், `சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் பாஜக அரசு தலையிடுவதாகவும், அவர்களின் சொத்துக்களை அபகரிப்பதற்கான யுத்தி இது' என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்புகின்றன.

ஆனால் மோடி 3.0 அரசோ, எதிர்க்கட்சிகள் தங்களின் வாக்கு வங்கிக்காக இஸ்லாமியர்களை தவறாக வழிநடத்துவதாக குற்றம்சாட்டுகிறது.

இந்த நிலையில், வக்ஃப் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் சார்பாக தாக்கல் செய்யப்ட்ட 70-க்கும் மேற்பட்ட மனுக்களைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், அதில் 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு ஏற்றது.

Waqf | வக்ஃப் திருத்த சட்டம்|
Waqf | வக்ஃப் திருத்த சட்டம்|

இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டத்தை, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் ஒப்புதல் பெற்று மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் அமல்படுத்தியது.

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு இவ்வழக்குகளை விசாரித்த போது, 'கடந்த ஏப்ரல் மாதம் வழக்கில் இடைக்கால உத்தரவில் வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதோரை உறுப்பினர்களாக நியமிக்க கூடாது; வக்பு சொத்துகளை புதிய சட்டத்தின் கீழ் ஆட்சியர்கள் வரையறை செய்யக் கூடாது' என கூறியதோடு மத்திய அரசு வக்ஃப் சட்டதிருத்தத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்திருந்தது.

முழு சட்டத்தையும் நிறுத்தி வைக்க..!

பின்னர் உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவிக்காலம் நிறைவடைய இருந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாய் பதவியேற்ற பிறகு அவரது அமர்வில் வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இவ்வழக்கின் விசாரணையில் கடந்த மே மாதம் 22-ம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதில் ''ஒரு விஷயத்தை அனுமானம் செய்வது எப்போதும் அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆதரவாகவும், அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே தலையிடுவதற்கு ஆதரவாகவும் இருக்கும் என நீதிமன்றம் கருதுகிறது.

உச்ச நீதிமன்றம்

எனவே இந்த வழக்கில் முழு சட்டத்தையும் நிறுத்தி வைக்க முழுமையான முகாத்திரங்களை காண முடியவில்லை.

ஒரு நபர் 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவராக இருந்தால் மட்டுமே வக்பு வழங்க முடியும் என்ற திருத்தத்திற்கு தடை விதிக்கிறோம்.

எந்த ஒரு வழிமுறையும் இல்லாமல் இது தன்னிச்சையான அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும். தனிப்பட்ட குடிமக்களின் உரிமைகள் மீது முடிவெடுக்க ஆட்சியரை அனுமதிக்க முடியாது! இது அதிகாரப் பிரிவினையை மீறும்.

வக்ஃபு நிலம் தொடர்பாக தீர்ப்பாயத்தால் தீர்ப்பு வழங்கப்படும் வரை, எந்த ஒரு தரப்பினருக்கும் எதிராக மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்க முடியாது.

வக்பு நிலம் தொடர்பாக மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்கும் வகையில் ஆட்சியருக்கு அத்தகைய அதிகாரங்களை வழங்குவதற்கு தடை விதிகிறோம்.

வக்ஃபு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாத உறுப்பினர்கள் 3 பேருக்கு மேல் இருக்கக் கூடாது.

உச்ச நீதிமன்றம்

ஒருவர் வக்ஃபு வழங்க 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்ற வேண்டும் என்ற விதி, ஒருவர் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவரா? இல்லையா? என்பதை தீர்மானிப்பது தொடர்பான விதிகளை மாநில அரசுகள் உருவாக்கும் வரை, அந்த விதிக்கு தடை விதிக்கிறோம்.

வக்ஃபு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முடிந்தவரை இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் முஸ்லிம் அல்லாத ஒருவரை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க அனுமதிக்கும் திருத்தத்தை நிறுத்தி வைக்க முடியாது" எனத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

நற்பெயருக்கு களங்கம்: ஐஸ்வர்யா ராய் பெயர், படங்களை சட்டவிரோதமாக பயன்படுத்த தடை - கூகுளுக்கு உத்தரவு!

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்களை அவரது அனுமதி இல்லாமல் சிலர் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றனர். அவரது புகைப்படத்தை ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் மாற்றி அதனை டிசர்ட், கப் போன்றவற்றில் கூட பயன்... மேலும் பார்க்க

``மாநிலப் பிரச்னைகளைத் தீர்க்க சுப்ரீம் கோர்ட் ஒன்றும் ஹெட்மாஸ்டர் கிடையாது'' - மத்திய அரசு வாதம்

மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பதவியில் இருக்கும் ஆளுநர்கள் மாநில அமைச்சரவை அனுப்பும் மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிப்பதாக எதிர்க்கட்ச... மேலும் பார்க்க

Judiciary: ``நீதித்துறையில் பாலின சமத்துவம் வேண்டும்'' - இந்திய வழக்கறிஞர்கள் கவுன்சில் சொல்வதென்ன?

நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி (Vipul Manubhai Pancholi) குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக அக்டோபர் 1, 2014 அன்று பதவியேற்றார்.பின்னர் ஜூலை 24, 2023 அன்று பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். ஆகஸ... மேலும் பார்க்க

``கோயில் பணத்தை கல்விக்கு செலவிடக் கூடாது என கேட்பது ஏன்? இதில் என்ன தவறு?" - உச்ச நீதிமன்றம்

சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் கல்லூரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர். ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.மனுவில், கோயில் நில... மேலும் பார்க்க

`ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்' - 17 ஆண்டுக்கு பிறகு வெளிவரும் மும்பை மாஃபியா அருண் காவ்லி

மும்பையில் கொலை, மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த அருண் காவ்லி கடந்த 2007ம் ஆண்டு சிவசேனா கவுன்சிலர் கம்லாகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட... மேலும் பார்க்க

சென்னை: ஸ்ரீதேவி வாங்கிய சொத்தில் தகராறு - உயர் நீதிமன்றத்தை நாடிய போனி கபூர்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ஈசிஆரில் 1988ம் ஆண்டு வாங்கிய அசையா சொத்துக்கு சட்டவிரோதமாக 3 பேர் உரிமை கோருவதாக, அவர்களின் 'மோசடி' வாரிசு சான்றிதழை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்... மேலும் பார்க்க