செய்திகள் :

சென்னை: ஸ்ரீதேவி வாங்கிய சொத்தில் தகராறு - உயர் நீதிமன்றத்தை நாடிய போனி கபூர்!

post image

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ஈசிஆரில் 1988ம் ஆண்டு வாங்கிய அசையா சொத்துக்கு சட்டவிரோதமாக 3 பேர் உரிமை கோருவதாக, அவர்களின் 'மோசடி' வாரிசு சான்றிதழை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் அவரது கணவர் தயாரிப்பாளர் போனி கபூர்.

இந்த விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டுமென தாம்பரம் தாலுகா தாசில்தாரிடம் அறிவுறுத்தியிருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

Sridevi

கடந்த ஏப்ரல் 22ம் தேதி, சட்டவிரோத சான்றிதழ்களை ரத்து செய்யக்கோரி போனி கபூர் மனு அளித்துள்ளார். அதன்மீது நடவடிக்கை எடுக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அல்லது தாம்பரம் தாலுகா தாசில்தாருக்கு உத்தரவு வழங்குமாறு ரிட் மனு தாக்கல் செய்தார். ரிட் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, மேற்கண்ட உத்தரவை வழங்கியுள்ளார்.

வழக்கின் பின்னணி

போனி கபூரின் மனைவி ஸ்ரீதேவி ஏப்ரல் 19, 1988-ல் குறிப்பிட்ட சொத்தை வாங்கியுள்ளார். அன்று முதல் அவரும் அவரது குடும்பத்தினரும் அதை ஃபார்ம் ஹவுஸாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

அந்த சொத்து அதற்கு முன்னர் எம்.சி.சம்பந்தா முதலியார் என்பவருக்கு சொந்தமானதாக இருந்திருக்கிறது. அவருக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள். குடும்பத்தினர் அனைவரும் பிப்ரவரி 14, 1960 அன்று சொத்துப் பிரிப்பு தொடர்பாக ஒரு பரஸ்பர ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீதேவி - போனி கபூர்

இந்த ஒப்பந்தம் அடிப்படையில் ஸ்ரீதேவி இந்த சொத்தை வாங்கி முறையாக விற்பனை பத்திரம் பதிவு செய்துள்ளார். திடீரென முதலியாரின் 2வது மனைவி மற்றும் 2 மகன் வழிப் பேரங்கள் என மூன்றுபேர் சொத்தில் தங்களுக்கு பங்கு இருப்பதாகக் கூறியுள்ளனர்.

உரிமை கோரும் மூவரின் சட்டப்பூர்வ உரிமையைக் கேள்வி எழுப்பியுள்ளார் போனி கபூர். குறிப்பாக 2வது மனைவி எனக் கூறப்படுபவர் பிப்ரவரி 5, 1975ல் திருமணம் நடந்ததாகக் கூறியுள்ளார். ஆனால் முதல் மனைவி 1999ம் ஆண்டுதான் இறந்ததால் அந்த திருமணம் சட்டப்பூர்வமானது அல்ல எனக் கூறியுள்ளார்.

மூவரும் "மோசடி" வாரிசுச் சான்றிதழின் அடிப்படையில் சொத்துக்கு உரிமை கோருவதற்காக, பல சிவில் வழக்குகளைத் தொடுத்து, வருவாய் அதிகாரிகளை அணுகி, பெரும் பிரச்னையை ஏற்படுத்தி வருவதாக புகார் அளித்த போனி கபூர், அவர்களின் சான்றிதழை விரைவில் ரத்து செய்யுமாறு அதிகாரிகளை கேட்டுகொண்டுள்ளார்.

Bihar SIR: "4 நாள்தான் கெடு; 65 லட்சம் பேரின் லிஸ்ட்டையும்..." - தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம்

பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தீவிர வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் உள்ளி... மேலும் பார்க்க

``தெரு நாய்களுக்கு ஆதரவாக மேம்போக்கான ஆதரங்களை முன்வைக்காதீர்கள்'' - உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லியில் 6 வயது குழந்தை தெரு நாய் கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. டெல்லியில் தெரு நாய்கள் பிரச்சினை நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டது. அதிகரித்து வரும் நாய்க்கடி மற்று... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: `சங்கத்தினர் அரசை ப்ளாக் மெயில் செய்கிறார்கள்!’ - அரசு தரப்பு

சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6 வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, கடந்த ஜூன் 16 ஆம் தேதி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாந... மேலும் பார்க்க

'நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை தரவேண்டியது அவசியம் இல்லை'- உச்ச நீதிமன்றத்துக்கு தேர்தல் ஆணையம்

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்களை தரவேண்டியது அவசியம் இல்லை என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்திருக்கிறது. SIR என்னும் தீவிர வாக்காளர் சரி... மேலும் பார்க்க

ED: `தண்டனை இல்லாமலேயே சிறையில் அடைக்கும் அமலாக்கத்துறை’ - உச்ச நீதிமன்றம் காட்டமான விமர்சனம்

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊழல் உள்ளிட்ட பல வழக்குகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இது பா.ஜ.க தலைமையிலான அரசின் அப்பட்டமான பழிவாங்கல். அமலாக்க இயக்குநரகம் பா.ஜ.க-வ... மேலும் பார்க்க

``அடிப்படை உரிமைகள் எதுவும் மீறவில்லை'' - டெல்லி நீதிபதியின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

2014 முதல் 2021 வரை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த யஸ்வந்த் வர்மா, 2021 அக்டோபரில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.அதைத்தொடர்ந்து, இவர் தனது குடும்பத்துடன் டெ... மேலும் பார்க்க