செய்திகள் :

ED: `தண்டனை இல்லாமலேயே சிறையில் அடைக்கும் அமலாக்கத்துறை’ - உச்ச நீதிமன்றம் காட்டமான விமர்சனம்

post image

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊழல் உள்ளிட்ட பல வழக்குகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இது பா.ஜ.க தலைமையிலான அரசின் அப்பட்டமான பழிவாங்கல். அமலாக்க இயக்குநரகம் பா.ஜ.க-வின் கைப்பாவையாக இருக்கிறது' என எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இந்த நிலையில், பூஷண் ஸ்டீல்-ஜேஎஸ்டபிள்யூ வழக்கு நேற்று இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

அப்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ``வெறும் குற்றச்சாட்டு என்பதின் அடிப்படையில், தண்டனை இல்லாமலே பல ஆண்டுகளாக மக்களை சிறையில் அடைப்பதில் அமலாக்க இயக்குநரகம் வெற்றிகரமாக செயல்படுகிறது' எனக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

பணமோசடி தடுப்புச் சட்டத்திற்கு (PMLA) எதிரான மறுஆய்வு மனுக்களை விசாரிக்கும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி உஜ்ஜல் பூயான் தலைமையிலான அமர்வில், நீதிபதி உஜ்ஜல் பூயான்,``நீங்கள் (அமலாக்க இயக்குநரகம்) பதிவு செய்துள்ள சுமார் 400 ECIR ECIR (அமலாக்கம் வழக்கு தகவல் அறிக்கை)களில், 10-க்கும் குறைவானவர்கள் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். அமலாக்கத்துறை அதன் விசாரணை முறைகளை மேம்படுத்த வேண்டும்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ஒவ்வொரு வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் காவலில் வைக்கப்பட்டு இறுதியாக விடுவிக்கப்படுகின்றனர். சட்டத்தை அமல்படுத்துபவர்களுக்கும் சட்டத்தை மீறுபவர்களுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. அமலாக்கத்துறை வழக்குகளில் ஏற்படும் தாமதத்திற்கு சட்டத்தையோ அல்லது அரசியலமைப்பையோ குறை கூற முடியாது" எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``அடிப்படை உரிமைகள் எதுவும் மீறவில்லை'' - டெல்லி நீதிபதியின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

2014 முதல் 2021 வரை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த யஸ்வந்த் வர்மா, 2021 அக்டோபரில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.அதைத்தொடர்ந்து, இவர் தனது குடும்பத்துடன் டெ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின்: `அப்ப 20 லட்சம் அபராதம் போடட்டுமா?’ - சி.வி சண்முகத்துக்கு ஷாக் | முழு விவரம்

தமிழகத்தில்`உங்களுடன்ஸ்டாலின்’என்னும் மருத்துவ முகாம் திட்டத்திற்கான விளம்பரங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.கஸ்டாலின்ஆகியோர் புகைப்படங்கள் இடம் பெற்று இருந்ததற்கு எதிர... மேலும் பார்க்க

மனமொத்து பாலியல் உறவு; ஆணுக்கு மட்டும் தண்டனை - சட்டபூர்வ வயதில் என்னதான் சிக்கல்?

வளரிளம் பருவத்தினருக்கு இடையேயான பாலியல் உறவை குற்றமாகக் கருதுகிற விவாதம் கடந்த சில வருடங்களாக தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. இந்த நிலையில், கடந்த மாத இறுதியில், மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ''இந... மேலும் பார்க்க

`ஒரு உண்மையான இந்தியன் இப்படி நிச்சயமாக பேச மாட்டார்’ - ராகுல் காந்தியை சாடிய உச்ச நீதிமன்றம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நாடு முழுவதும் `பாரத் ஜோடோ’ எனப்படும் ஒற்றுமை யாத்திரை நடை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு இருந்தார். அப்போது கடந்த 2022 டிசம்பர் மாதம் ப... மேலும் பார்க்க

`ஓரணியில் தமிழ்நாடு’ OTP விவகாரம்: `அவசரமாக உச்ச நீதிமன்றத்தை நாடியது ஏன்?' திமுக மனு தள்ளுபடி

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்னும் பெயரில், மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை திமுக மேற்கொண்டு வந்த... மேலும் பார்க்க

`கட்சி விதிப்படியே பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்’ - எடப்பாடி மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்

அதிமுக பொதுச் செயலாளராகத் தான் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட... மேலும் பார்க்க