செய்திகள் :

`ஓரணியில் தமிழ்நாடு’ OTP விவகாரம்: `அவசரமாக உச்ச நீதிமன்றத்தை நாடியது ஏன்?' திமுக மனு தள்ளுபடி

post image

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்னும் பெயரில், மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை திமுக மேற்கொண்டு வந்தது . இதன் ஒரு பகுதியாக பொதுமக்களிடமிருந்து ஆதார் எண், அவர்களது அலைபேசி எண் மற்றும் அதன் ஒடிபி ஆகியவற்றை பெற்று வந்தனர்.

இதற்கு எதிராக அதிமுக நிர்வாகியான ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தனிநபரின் பாதுகாப்பு விஷயங்களில் பிரச்னை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் இந்த OTP பெறுவதை எதற்காக திமுக மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களிடமிருந்து வாங்கும் இத்தகைய முக்கிய தகவல்கள் எவ்வாறு பாதுகாப்பாக சேமிக்கப்படுகின்றது? இந்த தகவல்களை வெளியே கசிந்து விட்டால் அதற்கு யார் பொறுப்பு? என கேள்விகள் எழுப்பியதோடு,  ஓடிபி பெறுவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்

ஓரணியில் தமிழ்நாடு - ஸ்டாலின்
ஓரணியில் தமிழ்நாடு - ஸ்டாலின்

 இந்த உத்தரவுக்கு எதிராக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி நீதிபதிகள் பி.எஸ் நரசிம்மா மற்றும் சந்துருக ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், `செல்போன் மற்றும் ஆதார் எண் ஓடிபி ஆகியவற்றை பெறும் விவகாரத்தில், பொதுமக்களை யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. பொதுமக்கள் அவர்களாக முன்வந்து தான் இந்த விவரங்களை பகிர்ந்து கொள்கின்றார்கள். தற்போதைய நவீன தொழில்நுட்ப காலகட்டத்தில் ஓலா உபேர் போன்ற வாடகை காரில் பயணம் செய்வதற்கு கூட otp என்பது பெறப்படுகின்றது. மேலும் இது ஒரு அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்காகும். ஆனால் அதை பொதுநல வழக்காக மனுதாரர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருக்கிறார்.  

இவை எதையும் கவனத்தில் கொள்ளாமல் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து இருக்கிறது எனவே இந்த தடை உத்தரவை நீக்க வேண்டும் என வாதங்களை முன்வைத்தார்.

அவசரமாக உச்ச நீதிமன்றத்தை நீங்கள் நாடியது ஏன்?

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், `` ஒவ்வொரு தனி நபர்களின் தனி உரிமை சார்ந்த விவகாரங்களில் மக்களை பாதுகாக்கும் பொறுப்பு என்பது நீதிமன்றங்களுக்கு இருக்கிறது. அதில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. இந்த விஷயம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்னமும் நிலுவையில் இருக்கும் நிலையில், அவசரமாக உச்ச நீதிமன்றத்தை நீங்கள் நாடியது ஏன்? உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை விசாரித்து முடிப்பதற்குள் என்ன அவசரம்?” என கேள்வி எழுப்பியதோடு திமுகவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

மேலும் மனுதாரருக்கு ஏதேனும் கோரிக்கை இருந்தால் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தையே நாடலாம் எனவும் அறிவுறுத்தல் வழங்கினர்.

`ஒரு உண்மையான இந்தியன் இப்படி நிச்சயமாக பேச மாட்டார்’ - ராகுல் காந்தியை சாடிய உச்ச நீதிமன்றம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நாடு முழுவதும் `பாரத் ஜோடோ’ எனப்படும் ஒற்றுமை யாத்திரை நடை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு இருந்தார். அப்போது கடந்த 2022 டிசம்பர் மாதம் ப... மேலும் பார்க்க

`கட்சி விதிப்படியே பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்’ - எடப்பாடி மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்

அதிமுக பொதுச் செயலாளராகத் தான் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட... மேலும் பார்க்க

Malegaon Blast Case: 17 ஆண்டுகால விசாரணை - பாஜக-வின் பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரும் விடுவிப்பு

கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்திற்கு உட்பட்ட மேலேகான் பகுதியில் உள்ள மசூதிக்கு அருகில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது . அப்பொழுது புனித ரம்ஜான் மாதம... மேலும் பார்க்க

`வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை' - தலைமை நீதிபதிக்கு பரிந்துரை!

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஸ்டெர்லைட், காவல் நிலைய மரணம், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராடியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழக முறைகேடு, அனைத்து சாதியினருக்கு அர்ச்சகர் பணி, திருப்பரங்க... மேலும் பார்க்க

`மக்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் தான்..!’ - OTP விவகாரத்தில் திமுக மேல்முறையீடு

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை அணுகும் வகையில் `ஓரணியில் தமிழ்நாடு' என்னும் பெயரில் திமுக உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வந்தது. இதன் ஒரு பகுதி... மேலும் பார்க்க

`மாறுவேடத்தில் மத்திய அரசு; குடியரசுத் தலைவருக்கே அனுப்புங்க’ - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு

தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பர்திவாலா மற்று... மேலும் பார்க்க