செய்திகள் :

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

post image

திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி பெற தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிணைக்கு வந்தபோது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், கட்சி ஆதார் விவரங்களை சேகரிக்கவில்லை என்று வாதிட்டார்.

இருப்பினும் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்னதாக சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுவில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் திமுக நடத்தும் உறுப்பினா் சோ்க்கையில், பொதுமக்களின் ஆதாா் விவரங்கள் சட்ட விரோதமாக சேகரிக்கப்படுகின்றன.

இதனடிப்படையில் வாக்காளா்களின் கைப்பேசிக்கு ஒருமுறை கடவுச்சொல் (ஓடிபி) எண் அனுப்பப்படுகிறது.

அந்த எண்ணை திமுகவினா் கேட்டுப் பெறுகின்றனா். இது தவறானது. இதுதொடா்பாக மத்திய அரசு, ஆதாா் தலைமைச் செயல் அலுவலா் ஆகியோா் விசாரணை நடத்தி, திமுக பொதுச் செயலா் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

இந்த மனு விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு, ஒருமுறை கடவுச்சொல் எண் எதற்காகக் கேட்கப்படுகிறது? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

தொடர்ந்து ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கையில் வாக்காளா்களிடமிருந்து ஒருமுறை கடவுச்சொல் எண்ணைப் பெற இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனா்.

The Supreme Court on Monday refused to stay an interim injunction by the Madras High Court against the use of OTP verification messages for the DMK's enrolment drive 'Oraniyil Tamil Nadu'.

விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சி இருந்ததால் பயணிகள் அசௌகரியத்துக்கு ஆளானதற்கு ஏர் இந்தியா மன்னிப்பு கோரியுள்ளது. சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கொல்கத்தா ... மேலும் பார்க்க

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் காணாமல்போன மூன்று சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவர்கள் மூன்று பேர் காண... மேலும் பார்க்க

'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்

நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால் இப்படியெல்லாம் பேசமாட்டீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய - சீன எல்லையில் 2,000 சதுர கிலோமீட்டர் இந்த... மேலும் பார்க்க

செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!

இந்தியாவைச் செத்த பொருளாதாரம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக்கூடாது என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியுள்ளார். சில பெரிய வல்லரசுகளின் தீவிர ஈடுபாட... மேலும் பார்க்க

விவசாய நிதி 20வது தவணை விடுவிப்பு: கேஒய்சி பூர்த்தி செய்ய மோடி வலியுறுத்தல்!

சுமார் 9.7 கோடி தகுதியுள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், விவசாயிகளுக்கான கெளரவ நிதியின் 20 ஆவது தவணை விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நிதி தவணையை தவறவிடாமல் இருக்க கேஒய்சி விண்ணப்பத்தை பூர்த்திசெய்... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரனின் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். ஒரு மாதத்துக... மேலும் பார்க்க