செய்திகள் :

விவசாய நிதி 20வது தவணை விடுவிப்பு: கேஒய்சி பூர்த்தி செய்ய மோடி வலியுறுத்தல்!

post image

சுமார் 9.7 கோடி தகுதியுள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், விவசாயிகளுக்கான கெளரவ நிதியின் 20 ஆவது தவணை விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நிதி தவணையை தவறவிடாமல் இருக்க கேஒய்சி விண்ணப்பத்தை பூர்த்திசெய்யுமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து பிரதமர் கூறுகையில், வங்கிகளில், கேஒய்சி பூர்த்தி செய்யும் நடவடிக்கையானது நாடு முழுவதும் தொடங்கியிருக்கிறது. ஜன் தன் வங்கிக் கணக்குகளுக்கு, கிராம பஞ்சாயத்துகளில் நடைபெறும் சிறப்பு முகாம் மூலம் இதனை செயல்படுத்தி விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேஒய்சி பூர்த்தி செய்யும் நடைமுறையை மிக விரைவாக எளிதாக நடத்தி முடிக்கும் ஆர்பிஐ மற்றும் அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இது அடிப்படையில் ஒரு உண்மையான சேவையாகும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி சென்றிருந்தபோது, விவசாயிகளுக்கான கௌரவ நிதியின் 20வது தவணையை, ஆக.2ஆம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம், 20வது தவணையாக ரூ.20,500 கோடி ஒதுக்கப்பட்டு, அது 9.7 கோடி தகுதியுடைய விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.6,000 வரவு வைக்கப்படும். இது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என்ற வீதத்தில் தலா ரூ.2000 வரவு வைக்கப்படுகிறது. தற்போது இதற்கான 20வது தவணை விடுவிக்கப்பட்டுள்ளது.

இ-கேஒய்சி கட்டாயம்!

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், தங்களது ஜன் தன் வங்கிக் கணக்குகளுக்கு இ-கேஒய்சி செய்வது கட்டாயம். பிஎம்-கிசான் இணையதளம் வாயிலாக, விவசாயிகளிடமிருந்து ஓடிபி பெறப்பட்டு கேஒய்சி பூர்த்தி செய்யப்படுகிறது. பொது சேவை மையத்துக்கு விவசாயிகள் நேரடியாக சென்று, பையோ மெட்ரிக் அடிப்படையிலான இ-கேஒய்சியையும் மேற்கொள்ளலாம்.

விவசாயிகள், ஓடிபி அல்லது பையோ மெட்ரிக் அல்லது முக அங்கீகார முறைகளில் ஒன்றைத் தேர்வு செய்து இ-கேஒய்சி விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி பெற தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிணைக்கு வந்தபோது... மேலும் பார்க்க

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் காணாமல்போன மூன்று சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவர்கள் மூன்று பேர் காண... மேலும் பார்க்க

'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்

நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால் இப்படியெல்லாம் பேசமாட்டீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய - சீன எல்லையில் 2,000 சதுர கிலோமீட்டர் இந்த... மேலும் பார்க்க

செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!

இந்தியாவைச் செத்த பொருளாதாரம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக்கூடாது என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியுள்ளார். சில பெரிய வல்லரசுகளின் தீவிர ஈடுபாட... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரனின் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். ஒரு மாதத்துக... மேலும் பார்க்க

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புது தில்லி: மாநிலங்களவை உறுப்பினர் சிபு சோரன் மறைவையொட்டி, மாநிலங்களவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.வயது முதிர்வு காரணமாக உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற... மேலும் பார்க்க