செய்திகள் :

அடுத்த 20 ஆண்டுகளுக்கு படம் இயக்கவுள்ள இயக்குநர் பற்றி தெரியுமா?

post image

ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படத் தொடரின் தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

விஷ்ணுவின் தசாவதாரங்களில் (பத்து அவதாரங்கள்) ஒன்றான நரசிம்ம அவதாரத்தை மையமாக வைத்து கடந்த ஜூன் 25 ஆம் தேதி திரைக்கு வந்த மஹா அவதார் நரசிம்மா என்கிற அனிமேஷன் திரைப்படம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் வரவேற்பைப் பெற்று ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருந்தார்.

மேலும், இந்த வார இறுதிக்குள் இன்னும் 50 கோடியை அதிகம் வசூலிக்கலாம் எனத் தெரிகிறது.

இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பால், மீதமுள்ள 9 அவதாரங்களையும் திரைப்படமாக எடுக்கத் ஹொம்பாலே நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

மஹா அவதார் நரசிம்மா படத்தின் இயக்குநர் அஷ்வின் குமார் மீதமுள்ள அவதாரங்களையும் இயக்க உள்ளாராம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு திரைப்படமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளதால் அடுத்த 20 ஆண்டுகள் வரை ஒரு இயக்குநர் பிசியாக இருக்கப்போகிறார்!

இதையும் படிக்க: அம்பிகாவதியின் ஆன்மா சிதைந்துவிட்டது: தனுஷ்

hombale films plan to make a film series of vishnu's dashavatara

துல்கர் சல்மான் - 41 படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தென்னிந்திய அளவில் பிரபலமான துல்கர் சல்மான் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் ஐயம் ... மேலும் பார்க்க

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்!

கரூர்: கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை கோ... மேலும் பார்க்க

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

கயல் தொடர் நாயகி சைத்ரா ரெட்டி நடிக்கும் புதிய இணையத் தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.சின்ன திரை நடிகைகளில் மக்கள் மனதைக் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி, கன்னட தொடர... மேலும் பார்க்க

கோபி, சுதாகர் படத்தின் போஸ்டர் வெளியீடு!

நகைச்சுவை நடிகர்கள் கோபி, சுதாகர் இணைந்து நடித்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. யூடியூபில் பரிதாபங்கள் நகைச்சுவைத் தொடர் மூலம் லட்சக் கணக்கான ரசிகர்களை ஈர்த்தவர்கள் கோபி மற்றும் சுதாகர். இவர்களின் ... மேலும் பார்க்க

அம்பிகாவதியின் ஆன்மா சிதைந்துவிட்டது: தனுஷ்

அம்பிகாபதி திரைப்படத்தின் கிளைமேக்ஸை ஏஐ உதவியால் மாற்றியதற்காகத் தனுஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் ஹிந்தியில் அறிமுகமான முதல் படமான ராஞ்சனா (தமிழில் அம்பிகாபதி) கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான... மேலும் பார்க்க

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

அகரம் விதைத் திட்டத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழா பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முகங்களில் ஒருவரான சூர்யா நடிப்பைத் தாண்டி பல நலத்திட்ட உதவிகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறா... மேலும் பார்க்க