செய்திகள் :

Kerala: 2 ரூபாய் மருத்துவர் ரைரு கோபால் மறைவு; இறுதிச்சடங்கில் குவிந்த மக்கள்; தலைவர்கள் இரங்கல்

post image

கேரளாவில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் ரைரு கோபால் நேற்று (ஆகஸ்ட் 3) காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 80.

கேரளாவின் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் ரைரு கோபால். இவர் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்தார். இவரது சேவை ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது.

டாக்டர் ரைரு கோபால்
டாக்டர் ரைரு கோபால்

நோயாளி ஒருவரின் வீட்டுக்குச் சென்று சிகிச்சை அளித்த போது, அங்கு காணப்பட்ட கொடுமையான நிலைமையை கண்டு, இந்த மருத்துவ சேவைப் பயணத்தை தொடங்கி இருக்கிறார். கூலி தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் மாணவர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த 1 வருடத்திற்கும் மேலாக உடல்நலக் குறைவால் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்ததார். இந்நிலையில் நேற்று உயிரிழந்த அவரின் இறுதிசடங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

இரங்கல் தெரிவித்த பினராயி விஜயன்
இரங்கல் தெரிவித்த பினராயி விஜயன்

கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கின்றனர் . ஆடம்பர வாழ்க்கையை துறந்து ஏழைகளுக்காகவே தனது வாழ்நாள் முழவதையும் அர்ப்பணித்த அவரது மறைவு கண்ணூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Doctor Vikatan: நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் புதினா உப்பு, ஓம உப்பு வலிகள் போக்குமா?

Doctor Vikatan:நாட்டு மருந்துக் கடைகளில் புதினா உப்பு, ஓம உப்பு என்று விற்கிறார்கள். அந்த உப்பைத் தடவினால் உடல் வலிகள் சரியாகும் என்கிறார்கள். இது உண்மையா, இந்த மருந்துகளைப் பயன்படுத்தலாமா?பதில் சொல்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஊதுவத்தியும் சாம்பிராணிப் புகையும் நுரையீரலை பாதிக்குமா?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் காலையிலும் மாலையிலும் ஊதுவத்தி ஏற்றிவைப்பது வழக்கம். விசேஷ நாள்களில் சாம்பிராணிப் புகையும் போடுவோம். சமீபத்தில் வீட்டுக்கு வந்திருந்த உறவினர், அதைப் பார்த்துவிட்டு, ஊது... மேலும் பார்க்க

Health: அறிகுறிகளை கண்டுபிடிக்க தெரிந்தால்தான் இரும்புச்சத்துக் குறைபாட்டை சரி செய்ய முடியும்!

இரும்புச்சத்துக் குறைபாடு, ஹீமோகுளோபின் குறைவா இருக்கு, அனீமிக், ரத்தசோகை, வெவ்வேறு பெயர்களில் நாம் குறிப்பிடப்பட்டாலும் பிரச்னை ஒன்றுதான். இதன் அறிகுறிகள், குழந்தைகளில் ஆரம்பித்து பெரியவர்கள் வரை ஒவ்... மேலும் பார்க்க

Doctor Vikatan: சளி, மூச்சுத்திணறலுக்கு தைலம், கற்பூரம் தடவுவது உயிரிழப்பை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: சென்னையில் எட்டு மாதக் குழந்தைக்கு, சளி பாதிப்புக்குகற்பூரத்தில் தைலம் கலந்து தடவியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தாக ஒரு செய்தியைக் கேள்விப்பட்டோம். சளி பிடித்தால் கற்ப... மேலும் பார்க்க

Betel Leaf: சளி, இருமலில் ஆரம்பித்து மலச்சிக்கல் வரை... வெற்றிலையின் மருத்துவ பலன்கள்!

வெற்றிலை... வெள்ளிலை, மெல்லிலை, மெல்லடகு, நாகவல்லி, நாகினி, வேந்தன், தாம்பூல வல்லி, சப்த ஷீரா, புஜங்கலதா எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் தெய்வீக மூலிகை இது. ‘Piper betle’ என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட... மேலும் பார்க்க

Doctor Vikatan: வழுக்கை தலையில் முடி வளரச் செய்யுமா சின்ன வெங்காயச்சாறு?

Doctor Vikatan: என்னுடைய தோழி அடிக்கடி சின்ன வெங்காயத்தை அரைத்துச் சாறு எடுத்துத் தலையில் தடவிக் குளிக்கிறாள். அது அவளுக்குமுடி வளர்ச்சிக்கு உதவுவதாகச் சொல்கிறாள். சின்ன வெங்காயச் சாற்றுக்குவழுக்கைத் ... மேலும் பார்க்க