செய்திகள் :

பியூன் வேலை: பிஎச்டி, எம்பிஏ உள்பட 24.76 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்!

post image

ராஜஸ்தான் மாநிலத்தில், பியூன் வேலைக்கு, பிஎச்டி, எம்பிஏ, சட்டம் படித்த இளைஞர்கள் என 24.76 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் முழுக்க பல்வேறு அலுவலகங்களில் காலியாக இருந்த 53,749 பியூன் காலிப் பணியிடங்களுக்கு சுமார் 24.76 லட்சம் விண்ணப்பங்கள் வந்திருந்தது, மாநிலத்தில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவிலும் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவில் இருக்கிறது என்பதை நிரூபிப்பதாக எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வரும் இளைஞர்களும், சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர்கள் உள்பட பியூன் வேலைக்கான கல்வித் தகுதியைக் காட்டிலும் அதிக தகுதி பெற்ற இளைஞர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பல ஆண்டுகாலமாக யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வருவதாகவும், வெற்றி பெறாததால், கிடைத்த வேலையை செய்யலாம் என்றுக் கருதியே பல இளைஞர்கள் பியூன் வேலைக்கு விண்ணப்பித்ததாகவும், வேலை இல்லாமல் பெற்றோரை எதிர்பார்த்து இருப்பதைக் காட்டிலும் இது மேலானது என்றே பலரும் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அது மட்டுமல்லாமல், இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கும்போது, ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் விண்ணப்பித்ததால், இணையதளம் முடங்கியதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இதற்கான விண்ணப்பங்கள் தொடங்கிய நிலையில், தற்போது விண்ணப்பித்த இளைஞர்களின் கல்வித் தகுதிகள் வெளியாகி பேசுபொருளாகியிருக்கிறது.

An issue has come to light in which 24.76 lakh people, including PhD, MBA, and law graduates, had applied for the job of a peon in the state of Rajasthan.

தில்லியில் சிபு சோரன் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

தில்லி மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும் ஜாா்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும் மாநி... மேலும் பார்க்க

விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சி இருந்ததால் பயணிகள் அசௌகரியத்துக்கு ஆளானதற்கு ஏர் இந்தியா மன்னிப்பு கோரியுள்ளது. சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கொல்கத்தா ... மேலும் பார்க்க

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி பெற தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிணைக்கு வந்தபோது... மேலும் பார்க்க

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் காணாமல்போன மூன்று சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவர்கள் மூன்று பேர் காண... மேலும் பார்க்க

'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்

நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால் இப்படியெல்லாம் பேசமாட்டீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய - சீன எல்லையில் 2,000 சதுர கிலோமீட்டர் இந்த... மேலும் பார்க்க

செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!

இந்தியாவைச் செத்த பொருளாதாரம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக்கூடாது என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியுள்ளார். சில பெரிய வல்லரசுகளின் தீவிர ஈடுபாட... மேலும் பார்க்க