செய்திகள் :

Shashi Thaoor: ``விராட் கோலியை இந்த போட்டியில்தான் அதிகமாக மிஸ் செய்கிறேன்'' - சசி தரூர் விமர்சனம்

post image

இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து அணி இதுவரை இரண்டு போட்டிகள் வென்று முன்னிலையில் உள்ளது. ஒரு போட்டி சமன் செய்யப்பட்ட நிலையில், ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

5-வது போட்டியின் இறுதி நாள் இன்று. இதில் வென்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரை சமன் செய்ய முடியும்.

Team India
Team India

சேசிங் செய்யும் இங்கிலாந்து அணி இன்று 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இன்று களமிறங்குகிறது. இதுவரை 6 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள இந்திய அணி, 4 விக்கெட்டுகள் வீழ்த்தினால் வெற்றிபெறும்.

இந்தியாவின் லெஜண்டரி வீரர்கள் சமீபத்தில் ஓய்வு பெற்றுள்ளதால், இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் களமிறங்கியது அணி. இந்தியா தொடரை சமன் செய்யக் கூட மிகக் குறைந்த வாய்ப்புகளே உள்ள நிலையில் இந்த போட்டியில் விராட் கோலியை மிஸ் செய்வதாகப் பதிவிட்டுள்ளார் சசி தரூர்.

"இந்த தொடரில் சிலமுறை நான் விராட் கோலியை மிஸ் செய்தேன், ஆனால் இந்த போட்டியில்தான் மிக அதிகமாக மிஸ் செய்கிறேன்.

அவரது மன உறுதியும் தீவிரமும், களத்தில் அவரது உத்வேகமூட்டும் இருப்பும், பேட்டிங் திறமையைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை எல்லாமும் இருந்திருந்தால் வேறுவிதமான முடிவு கிடைத்திருக்கும்.

ஓய்விலிருருந்து திரும்பவருமாறு அவரை அழைக்க அதிக தாமதமில்லை என நினைக்கிறேன். விராட், இந்த நாட்டுக்கு நீங்கள் தேவை!" எனப் பதிவிட்டுள்ளார் சசி தரூர்.

காங்கிரஸ் எம்.பி சசி தரூர் ஒரு தீவிரமான கிரிக்கெட் ரசிகர் எனபதை அவரது நாடாளுமன்ற உரைகள் மூலமே அறிய முடியும். கிரிக்கெட்டை உவமையாக வைத்து அரசியலை விளக்குவார்.

இந்தியா - பாகிஸ்தான் கிர்க்கெட் தொடர்பான Shadows Across the Playing Field என்ற புத்தகத்தின் இணை ஆசிரியர் கூட. ஐபிஎல் முதல் உலகக் கோப்பை வரை ஒவ்வொரு தொடரையும் கவனிப்பவர், இந்திய அணியின் நேர்மையான ஆதரவாளர்!

ENG vs IND: "கேப்டனின் கனவு வீரர் சிராஜ்; நாங்கள் கற்றுக்கொண்டது..." - தொடர் நாயகன் சுப்மன் கில்

இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இப்போட்டியில் சிராஜ் 9 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 8 விக்கெட்டுகளும் வீழ்த்தி இந்த... மேலும் பார்க்க

Eng vs Ind: "ஒவ்வொரு போட்டியிலும் போராடினோம்; சண்டை செய்தோம்" - வெற்றியில் நெகிழும் கே.எல்.ராகுல்!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் தொடரையும் 2-2 என இந்திய அணி டிரா செய்திருக்கிறது. இந்த ஓவல் போட்டியைப் பரபரப்... மேலும் பார்க்க

'அவரைப் போன்ற வீரர் நமது அணியிலும் இருக்க வேண்டும் என நினைக்க வைப்பவர்' - சிராஜை பாராட்டிய ஜோ ரூட்

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், முகமது சிராஜை `உண்மையான போராளி’ என்று பாராட்டி பேசியிருக்கிறார்.இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி பரபரப்பாக முடிந்திருக்கும் நிலையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், இந்... மேலும் பார்க்க

ENG vs IND: `ப்ரூக் கேட்சை பிடித்தபோது பவுண்டரி லைனில்..!’ - வெற்றிக்குப் பின்னர் சிராஜ்

இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.இப்போட்டியில் சிராஜ் 9 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 8 விக்கெட்டுகளும் வீழ்த... மேலும் பார்க்க

Chahal: `சில சமயங்களில் சில விஷயங்கள் காயப்படுத்துகின்றன' -ரோஹித் மனைவியின் கருத்து குறித்து சாஹல்

இந்திய கிரிக்கெட் வீரரான சாஹல் சமீபத்தில் கலந்துகொண்ட பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்கை, மனைவியுடனான விவாகரத்து, மன அழுத்தம் என பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். இந்நிலையி... மேலும் பார்க்க

Dhoni: "மகள்கள்தான் பெற்றோரை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்" - தோனி எமோஷனல்!

சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் தோனி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். மருத்துவமனையைத் திறந்து வைத்து விட்டு சில முக்கியமான விஷயங்களை தோனி பேசியிருந்தார்.தோனிரேபிட்... மேலும் பார்க்க