செய்திகள் :

மும்பையில் டெஸ்லாவின் முதல் சார்ஜிங் நிலையம்!

post image

மும்பையில் சார்ஜிங் நிலையங்களை டெஸ்லா நிறுவனம் இன்று (ஆக. 4) திறந்துள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு முதல் விற்பனையகத்தை (ஷோரூம்) டெஸ்லா திறந்த நிலையில், தற்போது முதல் சார்ஜிங் நிலையத்தையும் அமைத்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க், தனக்குச் சொந்தமான டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்யும் வகையில், கடந்த ஜூலை 15 ஆம் தேதி தனது முதல் விற்பனையகத்தைத் தொடங்கினார்.

மும்பையில் முதல் விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாடல் ஒய் என்ற காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 59.89 லட்சம்.

இந்தியாவில் விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச இறக்குமதி வரி காரணமாக டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் வராமல் இருந்தன. தற்போது வரியின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், சீனாவிலுள்ள டெஸ்லா ஆலையில் இருந்து கார்கள் இறக்குமதியாகின்றன.

உலகில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் டெஸ்லாவின் மாடல் ஒய் காரானது, இந்தியாவில் இரு வேறு வேரியன்ட்களில் (ரூ. 59.89 லட்சம் மற்றும் ரூ.67.89 லட்சம்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் டெஸ்லா கார்களின் விற்பனை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தனது மின்னணு கார்களுக்கான சார்ஜிங் நிலையத்தையும் டெஸ்லா இன்று திறந்துள்ளது. முதல் நிலையமானது மும்பையிலுள்ள பாந்த்ரா - குர்லா வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் காலாண்டிற்குள் லோவேர் பேரல், தாணே, நவி மும்பை ஆகிய பகுதிகளில் சார்ஜ் செய்யும் நிலையங்களைத் திறக்கவுள்ளது. ஒவ்வொரு நிலையத்திலும் ஒரே நேரத்தில் 4 கார்களை சார்ஜ் செய்யலாம் என டெஸ்லா தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க |அறிமுகமானது விவோ ஒய் 400! தள்ளுபடி விலையில் பெறுவது எப்படி?

Tesla launches its first charging facility at Bandra-Kurla Complex in Mumbai.

மக்களவையில் திரிணமூல் காங். எம்.பி.க்கள் தலைவராக மம்தாவின் மருமகன் தேர்வு!

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலரும் மக்களவை எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மக்களவையில் அக்கட்சி எம்.பி.க்களை வழிநடத்தும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் கட்ச... மேலும் பார்க்க

பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் ‘ஷிபு சோரன்!’ -ஜார்க்கண்ட் முதல்வர் உருக்கம்!

ஜார்க்கண்ட், பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் போன்றவர் மறைந்த ஷிபு சோரன் என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.’ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜே.எம்.எம்)’ கட்சியை நிறுவி அதன் தல... மேலும் பார்க்க

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியரை திருமணம் செய்ய 3 காரணங்கள்... அடேங்கப்பா!

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்ய 3 காரணங்கள் தெரியவந்துள்ளது. அவற்றைக் கேட்டால் நமக்கு ’அடேங்கப்பா!’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ரஷியாவைச் சேர்ந்தவொரு இளம்பெண் இந்த... மேலும் பார்க்க

சிபு சோரன் மறைவு: ஜார்க்கண்டில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரனின் மறைவையொட்டி ஜார்க்கண்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் நாளை(ஆஸ்ட் 05) விடுமுறை அ... மேலும் பார்க்க

சீன ஆக்கிரமிப்பு: 2019-ல் பாஜக எம்.பி. என்ன சொன்னார் தெரியுமா?

இந்தியாவின் 50-60 கிலோமீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கடந்த 2019லேயே அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. கூறியுள்ளார். இந்திய - சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் 2,000 சதுர கிலோமீ... மேலும் பார்க்க

ஐடி நிறுவன சிஇஓ-க்களில் அதிக சம்பளம் பெறுபவர் யார்?

கடந்த 2024-25 நிதியாண்டில் இந்தியாவில் இயங்கும் ஐடி நிறுவனங்களில் அதிக ஊதியம் பெறும் தலைமைச் செயல் அதிகாரியாக ஹெச்சிஎல் டெக்(HCL Tech) நிறுவனத்தின் சிஇஓ விஜயகுமார் இருந்தார்.அவரது மொத்த ஆண்டு வருமாணம்... மேலும் பார்க்க