செய்திகள் :

பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி சீராக உள்ளதாக மும்பை விமான நிலையம் பதிவு!

post image

மும்பை: அதானி குழுமத்திற்கு சொந்தமான மும்பை சர்வதேச விமான நிலையம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ஆண்டுக்கு ஆண்டு கிட்டத்தட்ட 1.36 கோடி பயணிகள் வளர்ச்சியைப் பதிவு செய்தது.

நாட்டின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையம், முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டில் 1.34 கோடி பயணிகளை ஏற்றிச் சென்றதாக தெரிவித்தது மும்பை சர்வதேச விமான நிலையம்.

வான்வெளி கட்டுப்பாடுகள், புவிசார் அரசியல் நிலைமைகள், மத்திய கிழக்கில் தற்காலிக வான்வெளி மூடல் மற்றும் சமீபத்திய விமான சம்பவங்களால் ஏற்பட்ட பயணிகளின் மனநிலையில் தொடர்ந்து தற்காலிக சரிவு இருந்தபோதிலும், சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாட்டு வேகத்தைத் தக்க வைத்துக் கொண்டதாக மும்பை சர்வதேச விமான நிலையம் தெரிவித்தது.

2026 காலாண்டில், விமான நிலையம் 82,369 விமானப் போக்குவரத்து இயக்கங்களை எளிதாக்கியது. இது ஆண்டுக்கு ஆண்டு 1.3 சதவிகிதம் வளர்ச்சியடைந்து, சர்வதேச விமானப் போக்குவரத்து இயக்கங்கள் 3.3 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்தது.

ஜூன் காலாண்டின் மிகவும் பரபரப்பான நாள் ஏப்ரல் 30 ஆகும். ஒரே நாளில் 989 விமானப் போக்குவரத்து இயக்கங்களை விமான நிலையம் கையாண்டது. அதே நேரத்தில் மே மாதத்தில் 1,61,603 பயணிகளுடன் அதிகபட்ச ஒற்றை நாள் பயணிகள் போக்குவரத்தைப் பதிவு செய்தது.

முதல் காலாண்டில் மும்பை சர்வதேச விமான நிலையம் தில்லி, பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய உள்நாட்டு பயணிகளின் போக்குவரத்தைப் பதிவு செய்தன. அதே நேரத்தில் சர்வதேச இடங்களான துபாய், அபுதாபி மற்றும் லண்டன் ஆகியவை இதில் அடங்கும்.

சர்வதேச பயணம் பொறுத்தவரை, மத்திய கிழக்கு 48 சதவிகிதத்துடனும் அதைத் தொடர்ந்து ஆசிய-பசிபிக் பகுதி 30 சதவிகிதமாகவும், ஐரோப்பா 14 சதவிகிதமாகவும் உள்ளது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவு!

ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு!

புதுதில்லி: ஆதித்யா பிர்லா கேபிடல் லிமிடெட் நிறுவனம் 2025 ஜூன் உடன் முடிவடைந்த முதல் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த லாபம் 10 சதவிகிதம் உயர்ந்து ரூ.835 கோடியாக உள்ளது என்றுது.இதுவே ஒரு வருடத்திற்கு முன்ப... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவு!

மும்பை: தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் வர்த்தக கட்டண நிச்சயமற்ற தன்மையால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவடைந்தது.அமெரிக்க அதிபர் டிரம்ப... மேலும் பார்க்க

அறிமுகமானது விவோ ஒய் 400! தள்ளுபடி விலையில் பெறுவது எப்படி?

இந்திய மின்னணு சந்தையில் விவோ ஒய் 400 5ஜி என்ற ஸ்மார்ட்போன் இன்று (ஆக. 4) அறிமுகமானது. ஸ்நாப்டிராகன் 4 மற்றும் 6000 mAh பேட்டரி திறன் கொண்டதால், மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. விவோ ஒய் 4... மேலும் பார்க்க

உலோகம், ஆட்டோ துறை பங்குகள் ஏற்றத்தால் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் உலோகம், ஆட்டோ பங்குகள் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து, சென்செக்ஸ் 419 புள்ளிகள் உயர்ந்து 81,000 புள்ளிகளாகவும், நிஃப்டி 157.40 புள்ளிகள் உயர்ந்து 24,722.75 புள்ளிகளாக நிறைவட... மேலும் பார்க்க

ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

வாரத்தின் முதல் நாளான இன்று(ஆக. 4) பங்குச்சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,765.83 என்ற புள்ளிகளில் தொடங்கியது.பிற்பகல் 12.35 மணியளவில... மேலும் பார்க்க

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

புதுதில்லி: பிசி ஜூவல்லர்ஸ் கடந்த நான்கு மாதங்களில் அதன் நிகர கடனை 19 சதவிகிதம் குறைத்து ரூ.1,445 கோடியாகக் உள்ளதாக தெரிவித்தது. மேலும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் கடன் இல்லாத நிறுவனமாக மாறும் என்று... மேலும் பார்க்க