செய்திகள் :

மக்களவையில் திரிணமூல் காங். எம்.பி.க்கள் தலைவராக மம்தாவின் மருமகன் தேர்வு!

post image

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலரும் மக்களவை எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மக்களவையில் அக்கட்சி எம்.பி.க்களை வழிநடத்தும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களின் தலைவராக பதவி வகித்த அக்கட்சியின் மூத்த தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரது பதவி இப்போது அபிஷேக் பானர்ஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற எம்.பி.க்களுடன் அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி இன்று(ஆக. 4) மேற்கொண்ட ஆலோசனையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் 28 பேருக்கும் மம்தா பானர்ஜியின் மருமகனான அபிஷேக் பானர்ஜி தலைவராக இருப்பார்.

Abhishek Banerjee named TMC's Parliamentary leader in Lok Sabha

மும்பையில் டெஸ்லாவின் முதல் சார்ஜிங் நிலையம்!

மும்பையில் சார்ஜிங் நிலையங்களை டெஸ்லா நிறுவனம் இன்று (ஆக. 4) திறந்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு முதல் விற்பனையகத்தை (ஷோரூம்) டெஸ்லா திறந்த நிலையில், தற்போது முதல் சார்ஜிங் நிலையத்தையும் அமைத்த... மேலும் பார்க்க

பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் ‘ஷிபு சோரன்!’ -ஜார்க்கண்ட் முதல்வர் உருக்கம்!

ஜார்க்கண்ட், பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் போன்றவர் மறைந்த ஷிபு சோரன் என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.’ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜே.எம்.எம்)’ கட்சியை நிறுவி அதன் தல... மேலும் பார்க்க

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியரை திருமணம் செய்ய 3 காரணங்கள்... அடேங்கப்பா!

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்ய 3 காரணங்கள் தெரியவந்துள்ளது. அவற்றைக் கேட்டால் நமக்கு ’அடேங்கப்பா!’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ரஷியாவைச் சேர்ந்தவொரு இளம்பெண் இந்த... மேலும் பார்க்க

சிபு சோரன் மறைவு: ஜார்க்கண்டில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரனின் மறைவையொட்டி ஜார்க்கண்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் நாளை(ஆஸ்ட் 05) விடுமுறை அ... மேலும் பார்க்க

சீன ஆக்கிரமிப்பு: 2019-ல் பாஜக எம்.பி. என்ன சொன்னார் தெரியுமா?

இந்தியாவின் 50-60 கிலோமீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கடந்த 2019லேயே அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. கூறியுள்ளார். இந்திய - சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் 2,000 சதுர கிலோமீ... மேலும் பார்க்க

ஐடி நிறுவன சிஇஓ-க்களில் அதிக சம்பளம் பெறுபவர் யார்?

கடந்த 2024-25 நிதியாண்டில் இந்தியாவில் இயங்கும் ஐடி நிறுவனங்களில் அதிக ஊதியம் பெறும் தலைமைச் செயல் அதிகாரியாக ஹெச்சிஎல் டெக்(HCL Tech) நிறுவனத்தின் சிஇஓ விஜயகுமார் இருந்தார்.அவரது மொத்த ஆண்டு வருமாணம்... மேலும் பார்க்க