செய்திகள் :

Rahul Gandhi: "உண்மையான இந்தியர் இப்படிப் பேசமாட்டார்" - ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்

post image

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜடோ யாத்திரையின்போது சீனாவிடம் இந்தியா ராணுவம், லடாக்கில் 2000 ச.கி.மீ பரப்பளவு நிலத்தை விட்டுக்கொடுத்ததாகப் பேசியதை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏஜி மசிஹ் அமர்வில் இந்த வழக்கை விசாரித்தனர். 2020ம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த வன்முறை சம்பவம் பற்றிய ராகுல் காந்தியின் கருத்துக்கு வலுவாக மறுப்பு தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அந்த வன்முறைக்குப் பிறகு 2000 ச.கி.மீ இடத்தை சீனா ஆக்கிரமித்ததாகவும் பிரதமர் மோடி மற்றும் அவரது அரசாங்கம் 'சரணடைந்துவிட்டதாகவும்' ராகுல் குற்றம்சாட்டியிருந்தார். அவர்மீது ராணுவத்தை இழிவுபடுத்தியதாக கிரிமினல் அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.

"2000 ச.கி.மீ இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால் இது போலப் பேச மாட்டீர்கள்" என்றார் நீதிபதி தத்தா.

"நீங்கள் அங்கே இருந்தீர்களா, உங்களிடம் நம்பகமான ஆதாரங்கள் இருக்கிறதா" என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி காந்தி.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, "அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்காவிட்டால்... அவர் எப்படி எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு நீதிபதி தத்தா, "எனில் நீங்கள் இந்த விஷயங்களை ஏன் நாடாளுமன்றத்தில் எழுப்பவில்லை?" என எதிர்க்கேள்வி எழுப்பினார்.

பின்னர் வழக்கை ரத்து செய்யக் கோரிய ராகுல் காந்தியின் மனுவுக்கு எதிராக நோட்டீஸ் வழங்கியது நீதிமன்றம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

தஞ்சாவூர்: வெளிநடப்பு, வாட்டர் பாட்டில் வீச்சு, தர்ணா - மாநகராட்சி கூட்டத்தில் ரகளை; என்ன நடந்தது?

தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் சண்.இராமநாதன் தலைமையில் நடந்தது. இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன் மற்றும் கவுன்ன்சிலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டம் தொடங்கியதும், 12வது வார்டு த... மேலும் பார்க்க

Durai Vaiko: பிரதமர் மோடியுடன் அவரச சந்திப்பு; காரணம் இதுதான் துரை வைகோ விளக்கம்

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ இன்று சந்தித்துப் பேசியிருக்கிறார். ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ ம... மேலும் பார்க்க

பாஜக: "கீழடி, மேலடியை விட்டுவிட்டு மக்களுக்கு ஸ்டாலின் நன்மை செய்ய வேண்டும்" - நயினார் நாகேந்திரன்

விருதுநகர் தனியார் மண்டபத்தில் பாஜகவின் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி... மேலும் பார்க்க

'கூவம் போல் ஆகிவிட்டது மதிமுக.. நீங்கள் தோற்றுவிட்டீர்கள் தலைவரே..' - வெளுத்துவாங்கிய மல்லை சத்யா

கூட்டத்தில் திருவேங்கடம் பேசுகையில், "வாக்கி டாக்கியில் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை 'ஓவர், ஓவர்' என்று சொல்வதைப் போல, 'துரை வைகோ வாழ்க' எனச் சொல்ல வேண்டும் என நினைக்கிறார்கள். வாரிசு அரசியல் செய்வதற்க... மேலும் பார்க்க

திமுக: "விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டுப் பேசுவது, அன்புமணிக்கு நல்லது" - அமைச்சர் துரைமுருகன் பதிலடி

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த ஜூலை 25-ம் தேதியிலிருந்து `தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்’ என்கிற தலைப்பில், நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார்.நேற்று (ஆகஸ்ட் 3) இரவு வேலூரில் ... மேலும் பார்க்க