செய்திகள் :

`NRC பயத்தில் முதியவர் விபரீத முடிவு' - மத்திய அரசை சாடும் திரிணாமுல் காங்கிரஸ்

post image

தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) அமல்படுத்தப்பட்டால் தான் திரும்ப வங்க தேசத்துக்கு அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் 63 வயது முதியவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்தியில், 1972-ம் ஆண்டு வங்க தேசத்தின் டாக்காவிலிருந்து வந்த திலீப் குமார் சஹா, கொல்கத்தாவில் வாழ்ந்து வந்தார். ரீஜண்ட் பார்க் பகுதியில் இருந்த ஒரு தனியார் பள்ளியில் பணிபுரிந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று பூட்டிய அறையில் மின் விசிறியில் சடலமாக மீட்கப்பட்டார்.

தூக்கில் சடலம்

இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள், பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து பேசிய திலீப் குமார் சஹாவின் மனைவி ஆரத்தி சஹா, ``என் கணவரை பலமுறை அழைத்தும் அவர் பதிலளிக்கவில்லை. அதன்பிறகுதான் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. சிறுவயதிலிருந்தே கொல்கத்தாவில் வசித்துவந்த என் கணவர் சமீபகாலமாக என்.ஆர்.சி குறித்து பதற்றமாக இருந்தார். அவ்வப்போது நாம் முகாமில் அடைக்கப்பட்டு மீண்டும் வங்க தேசத்துக்கே அனுப்பப்படுவோம் எனக் கூறிக்கொண்டே இருந்தார். அந்த பதற்றத்தில்தான் அவர் தற்கொலை செய்திருக்கிறார்" என்றார்.

இந்த தற்கொலை குறித்து காவல்துறை மேலும் விசாரித்து வருகிறது. இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ அருப் பிஸ்வாஸ் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நேசித்த நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவோம் என்ற பயம் ஒரு மனிதனை இதைத்தான் செய்யவைக்கும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

டெல்லி: `நாங்கள் உதவி கேட்டு கத்தினோம்' - தனக்கு நடந்த செயின் பறிப்பு குறித்து தமிழக எம்.பி.சுதா

திருடர்கள், வழிப்பறியில் ஈடுபடுவர்கள் எதிரில் யார் இருக்கிறார்கள் என்பதைப்பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களின் இலக்கு வழிப்பறியில் ஈடுபடுவது ஒன்றுதான். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யிட... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: பள்ளி வளாக கிணற்றுக்குள் மாணவன் சடலம்... கொலையா? - உறவினர்கள் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகிலுள்ள கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரின் மகன் முகிலன் (வயது 16). திருப்பத்தூரில், அரசு நிதியுதவியுடன் செயல்பட்டுவரக்கூடிய `தோமினிக் சாவியோ’ ... மேலும் பார்க்க

சேலம் சிறுமி மாயமான வழக்கு; சிறுமியை குடும்பத்தினரே விற்றார்களா? போலீஸ் தீவிர விசாரணை

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள புள்ளக்கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. தறித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு மூன்று மகன்களும், கவிஷா (4) என்ற மகளும் உள்ளனர். மீனா கார... மேலும் பார்க்க

15 வயதில் காதல் திருமணம்; உறவில் விரிசல்; கணவனை கொலை செய்து சாக்கடையில் வீசிய மனைவி

டெல்லியில் உள்ள அலிபூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சோனியா (34). இவரது கணவர் பிரித்தம். இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் டெல்லியில் பதிவாகி இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி ஹரியானாவில் உள்ள சோனிப... மேலும் பார்க்க

ஒடிசா: 15 வயது பெண் உயிரோடு எரிப்பு; 'தற்கொலையா? கொலையா?' - பெண்ணின் தந்தை சொல்வது என்ன?

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள பாலங்கா என்ற இடத்தில் கடந்த 19ம் தேதி 15 வயது பெண் 75 சதவீத தீக்காயத்துடன் புபனேஷ்வர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவருக்கு மூன்று பேர் தீ வைத்... மேலும் பார்க்க

சென்னை: தினமும் பாலியல் டார்ச்சர் - இளைஞரை சிக்க வைத்த இளம்பெண்

சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதாகும் பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லும்போது அவரை இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை கொடுத்திர... மேலும் பார்க்க