செய்திகள் :

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

post image

சின்ன திரை நடிகை ஜீவிதா குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

வழக்கமாக நண்பர்களுடன் இருக்கும் நாள்களை புகைப்படங்களாக பதிவிடும் ஜீவிதா, பிறந்தநாளை தனது குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடியுள்ளார்.

குடும்பத்துடன் ஜீவிதா

நண்பர்கள் ஏற்பாடு செய்யும் ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டங்களை சமூகவலைதளங்களில் பதிவிடும் நடிகைகளுக்கு மத்தியில், குடும்ப உறுப்பினர்களுடன் எளிமையாகப் பிறந்தநாள் கொண்டாடியுள்ளதாக ஜீவிதாவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரஞ்சனி தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை ஜீவிதா. ஆரம்பக்கட்டத்தில் சிங்கப் பெண்ணே தொடரில் சிறிய பாத்திரத்தில் நடிப்பதற்காக நேர்முகத் தேர்வில் தேர்வான நிலையில், அதீத திறமையால் சிறிது நாள்களிலேயே புதிய தொடருக்கு நாயகியானார்.

கோவையைச் சேர்ந்த ஐடி துறை ஊழியரான இவர், நடிப்பதற்கு வந்தபோது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், தனது நடிப்பின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக சின்ன திரையில் நுழைந்து, தற்போது தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

ஜீவிதா

தற்போது புதிய தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்துவரும் ஜீவிதா, தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்களை ரசிகர்களுடன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், அவர் எளிமை, அமைதி, அன்புகள் நிறைந்த பிறந்தநாள் கொண்டாட்டம். இது குடும்பத்திற்கான நேரம் எனப் பதிவிட்டுள்ளார்.

தனது பிறந்தநாளை குடும்பத்துடன் எளிமையான முறையில் கொண்டாடியுள்ளதை, சில சிறிய பரிசுகளுடனும், கைப்பட வீட்டில் செய்த கேக் உடனும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

Serial actress Jeevita celebrated her birthday with her family.

எதிர்நீச்சல் - 2, இனி 6 நாள்களும் ஒளிபரப்பாகாது!

எதிர்நீச்சல் -2 தொடர் இனி வாரத்தின் 6 நாள்களும் ஒளிபரப்பாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சன் தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சியின் வருகையால் எதிர்நீச்சலின் ஒளிபரப்பு நாள்களில் ஒன்று குறைந்துள்ளது. அதாவது... மேலும் பார்க்க

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

பாக்கியலட்சுமி தொடரில் நடித்துப் புகழ் பெற்ற நடிகை சுசித்ரா, தற்போது புதிய தொடரில் நடிக்கவுள்ளார். இந்தத் தொடர், அவரின் தாய்மொழியான கன்னடத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.வங்க மொழியில் உருவான ஸ்ரீமோயி என்ற தொட... மேலும் பார்க்க

ஷாருக்கான் சிறந்த நடிகரா? தேசிய விருதுக் குழுவை விளாசிய ஊர்வசி!

சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்ற ஊர்வசி தன் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார். 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுகான தேசிய விருதுகள் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த 71-வது ... மேலும் பார்க்க

துல்கர் சல்மான் - 41 படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தென்னிந்திய அளவில் பிரபலமான துல்கர் சல்மான் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் ஐயம் ... மேலும் பார்க்க

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்!

கரூர்: கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை கோ... மேலும் பார்க்க

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

கயல் தொடர் நாயகி சைத்ரா ரெட்டி நடிக்கும் புதிய இணையத் தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.சின்ன திரை நடிகைகளில் மக்கள் மனதைக் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி, கன்னட தொடர... மேலும் பார்க்க