செய்திகள் :

விஜய்யை எம்ஜிஆருடன் ஒப்பிட வேண்டாம்: சி. விஜயபாஸ்கர்

post image

எம்ஜிஆர் ஒரு மகத்தான தலைவர், அவரை யாருடன் ஒப்பிட வேண்டாம் என்று விஜய் குறித்த கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார்.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை காலை அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

அடுத்த ஆண்டு அண்ணா பிறந்த நாளுக்கு தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இருக்கும். பல்வேறு சோதனைகளைக் கடந்து, சாதனைச் சரித்திரம் படைத்திருக்கும் அதிமுக, மக்களை நேசிக்கிறது. மக்கள் அதிமுகவை நேசிக்கிறார்கள்.

மக்களுக்கு திமுக மீது வெறுப்பு, அதிருப்தி இருக்கிறது. இதற்கு மாற்று அதிமுகதான். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என்றார்.

எம்ஜிஆருக்கு கூடிய கூட்டத்தைப் போல, விஜய்க்கும் கூட்டம் வருவதாக பேசப்படுகிறதே என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், "எம்ஜிஆர் ஒரு மகத்தான மனிதர். அவரை வேறு யாரோடும் ஒப்பிட வேண்டாம்" என்று கூறினார்.

Former AIADMK Minister C. Vijayabaskar says that Don't compare Vijay with MGR

இதையும் படிக்க | அதிமுகவில் தலைவர்கள் இணையவில்லை என்றால்..! - ஓபிஎஸ் பேட்டி

பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது: வழக்குரைஞர் பாலு

பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்று அன்புமணி வழக்குரைஞர் பாலு தெரிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல்... மேலும் பார்க்க

பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். ... மேலும் பார்க்க

அதிமுகவில் தலைவர்கள் இணையவில்லை என்றால்...! - ஓபிஎஸ் பேட்டி

அதிமுக தலைவர்கள் கட்சியை ஒன்றிணைக்கவில்லை என்றால் தொண்டர்கள் இணைந்து செய்வார்கள் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா... மேலும் பார்க்க

முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் இருக்கும்வரை கூட்டணியை ஏற்க மாட்டோம்: டிடிவி தினகரன்

முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் இருக்கும்வரை கூட்டணியை ஏற்க மாட்டோம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர் பழைய பேரு... மேலும் பார்க்க

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை: முதல்வர் தொடக்கி வைத்தார்!

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(செப். 15) தொடக்கி வைத்தார்.தமிழக அரசின் ‘தாயுமானவர்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோா் இ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்தநாள் விழா: அனைத்துக் கட்சியினர் மரியாதை!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அண்ணாவின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு ம... மேலும் பார்க்க