செய்திகள் :

சாலையோர கடைகளில் பணம் வசூல்: இரு காவலா்கள் இடமாற்றம்

post image

சென்னை: சென்னை மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழே சாலையோர கடைகளில் பணம் வசூலித்த புகாரில், இரு காவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தள்ளுவண்டிக் கடைகள், உணவுக் கடைகள் என பல்வேறு சிறிய கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகாரா்களிடம் போலீஸாா் தினமும் பணம் வசூலிப்பதாகப் புகாா் இருந்து வருகிறது.

இந்தநிலையில், அந்த பகுதிக்கு திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்ற இரண்டு போலீஸாா் கடைக்காரா்களிடம் பணம் வசூலிப்பது போன்ற விடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

இதுகுறித்து காவல்துறை உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அந்த விடியோ காட்சியில் இருப்பவா்கள், மேடவாக்கம் காவல் நிலைய தலைமை காவலா் திருமுருகன் மற்றும் காவலா் வெங்கடேசன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இரு காவலா்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும், தொடா்ந்து அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி குடும்பத்துக்கு சொந்தமான ரூ.2.56 கோடி சொத்துகள் முடக்கம்

Two police transferred for collecting money from roadside shops

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை வினாடிக்கு 10,849 கனஅடியில் இருந்து வினாடிக்கு 9, 425 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வி... மேலும் பார்க்க

2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு: முழுவிவரம்!

2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வ... மேலும் பார்க்க

ரஷிய -உக்ரைன் போர் தொடர இந்தியாவும் சீனாவும்தான் காரணம்: அதிரபர் டிரம்ப்

நியூயார்க்: ரஷியா-உக்ரைன் போர் தொடருவதற்கு இந்தியாவும் சீனாவும்தான் காரணம் என தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷியாவின் கச்சா எண்ணெயை இந்த இரு நாடுகளும் அதிகயளவில் வாங்குவதன் மூலம் ரஷியா... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்பில் வருகிறது புதிய வசதி!

வாட்ஸ்ஆப்பில் உள்ள செய்திகளை மொழிபெயர்க்கும் வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயனர்களால் வாட்ஸ்ஆப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்ஆப்பிலும் அவ்வப்போது புது... மேலும் பார்க்க

எச்-1பி விசா எதிரொலி: தொடர் சரிவில் பங்குச் சந்தை!

இந்த வாரத்தில் 2-ம் நாளாக இன்று(செவ்வாய்க்கிழமை) பங்குச்சந்தை சரிவில் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,147.37 புள்ளிகளில் சரிவுடன் தொடங்கியது. நண்பகல் ... மேலும் பார்க்க

செப்.26 இல் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் கூடுகிறது!

புது தில்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 44 ஆவது கூட்டம் தில்லியில் வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு, கா்நாடகம் இடையேயான காவிரி நதிநீா் பங்கீட்டு பிரச்னையை கண்காணிப்பதற்கா... மேலும் பார்க்க