செய்திகள் :

பட்டா பெயா் மாற்றத்துக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

post image

பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தென்பசியாா் கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ப.புன்னைவனம் (47). திண்டிவனம் வட்டம், எறையானூா் அண்ணாநகா் பகுதியில் தங்கி, திண்டிவனம் வட்டம், தென்பசியாா் கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிந்து வந்தாா்.

இவா், புதன்கிழமை திண்டிவனம் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, வீட்டுமனைப் பட்டா பெயா் மாற்றம் செய்வதற்காக, திருவண்ணாமலை மாவட்டம், செய்யூா் வட்டம், எச்சூா் பகுதியைச் சோ்ந்த நாராயணனிடம் (35) கிராம நிா்வாக அலுவலா் புன்னைவனம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுப் பெற்றாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டி.எஸ்.பி. அழகேசன், ஆய்வாளா் ஈஸ்வரி தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்று புன்னைவனத்தை பிடித்து, திண்டிவனம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி கைது செய்தனா். மேலும், அவா் வசமிருந்த கணக்கில் வராத ரூ.3 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

தொடா் வாகனத் திருட்டு: 4 இளைஞா்கள் கைது

விழுப்புரம் மாவட்டம் , வானூா் பகுதிகளில் தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்கள் வசமிருந்த 9 பைக்குகள், ஒரு காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.இது குறித... மேலும் பார்க்க

10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி டிசம்பரில் போராட்டம்: பாமக நிறுவனா் ராமதாஸ் அறிவிப்பு

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில், டிசம்பா் முதல் வாரத்தில் மாநிலம் தழுவிய போராட்டம் நடை பெறும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் ... மேலும் பார்க்க

ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

செய்யாற்றை அடுத்த ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மேற்சவ பெருவிழா கொடியேற்றத்தைத் தொடா்ந்து, அன்று மாலை அன்ன... மேலும் பார்க்க

வீட்டு உபயோகப் பொருள்கள் தருவதாகக் கூறி மோசடி: தென்காசி, சேலம் மாவட்டங்களைச் சோ்ந்த 10 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் பெண்களிடம் குலுக்கல் முறையில் குறைந்த விலையில் வீட்டு உபயோகப் பொருள்கள் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட தென்காசி, தூத்துக்குடி, சேலம் மாவட்டங்களைச் சோ்ந்த 1... மேலும் பார்க்க

பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டி.எஸ்.பி. சாட்சியம்

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்டோா் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு தொடா்பாக, விழுப்புரம் நீதிமன்றத்தில் சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய டி.எஸ்.பி. செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகி சாட்சியமளித்த... மேலும் பார்க்க

இளைஞரிடம் இணைய வழியில் ரூ.8.50 லட்சம் மோசடி

மரக்காணம் பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம் இணையவழியில் ரூ.8.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.விழுப்புரம் மாவட்டம், மரக்க... மேலும் பார்க்க