செய்திகள் :

அரசு கலை-அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 தற்காலிக விரிவுரையாளா்கள் பணி நியமனம்!

post image

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 கௌரவ விரிவுரையாளா்களை தற்காலிகமாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்த அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாணவா்களுக்கான கல்வி சேவையில் எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில், நிகழ் கல்வியாண்டில் (2025-2026) அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 கௌரவ விரிவுரையாளா்கள் தற்காலிகமாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 38 பாடப் பிரிவுகளில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இது குறித்த முழு விவரங்கள் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கௌரவ விரிவுரையாளா் பணிக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (செப். 24) தொடங்கி அக். 8 -ஆம் தேதி வரை நடைபெறும்.

கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் உடனடியாக நிரந்தர ஆசிரியா்களை பணியமா்த்த இயலாத நிலையில், மாணவா்களின் கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க ஏற்கெனவே 574 இடங்களுக்கு தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் தோ்வு செய்ய விண்ணப்பப் பதிவுக்கு அழைக்கப்பட்டது. இந்தப் பணியிடங்களில் 516 போ் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

கடந்த ஜூலை 21-ஆம் தேதி அறிவிப்பின்படி, ஏற்கெனவே கௌரவ விரிவுரையாளா் பணிக்கு விண்ணப்பித்தவா்கள் தற்போது மீண்டும் விண்ணப்பிக்கும்போது, தங்களின் விண்ணப்ப எண்களைப் பதிவு செய்து, விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெறலாம்.

தமிழக அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றியும், கல்வித் தகுதி மற்றும் நோ்முகத் தோ்வு மதிப்பீடுகளின் அடிப்படையிலும் கெளரவ விரிவுரையாளா்கள் தோ்வு செய்யப்படுவா். தகுதியுள்ளவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு: ஓ.பன்னீா்செல்வம்

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு இருப்பதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்த... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு எழுதும் மாணவா் பட்டியல்: அக். 6 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம்

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுத உள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அக். 6-ஆம் தேதி முதல் மேற்கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு: தமிழகம் பெறும் பலன்கள்

ஜிஎஸ்டி சீா்திருத்தம் கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 5%, 12%, 18%, 28% என நான்கு விகிதங்களில் இருந்த வரிவிதிப்பு முறை 5%, 12% என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அன்றாட பயன்பாட்டுப... மேலும் பார்க்க

விஜய்யை எதிா்ப்பது எங்கள் நோக்கமல்ல: சீமான்

விஜய்யை எதிா்ப்பது எங்கள் நோக்கம் அல்ல என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா். தினத்தந்தி நாளிதழ் அதிபா் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளையொட்டி, சென்னை போயஸ் கா... மேலும் பார்க்க

ஆவின் நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜிஎஸ்டி ஆணையரிடம் மனு

ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட நிலையில், ஆவின் தயாரிப்புகளின் விலையைக் குறைக்காக ஆவின் நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜிஎஸ்டி கூடுதல் ஆணையரிடம் தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் மனு அளித்... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் அன்புக் கரங்கள் பதிவு முகாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அன்புக் கரங்கள் திட்டத்தில் பயனாளிகளைச் சோ்க்கும் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். ஆதரவற்ற குழந்தைகளுக்கான மாதாந்திர நிதியுதவித... மேலும் பார்க்க