கஞ்சா பதுக்கி வைத்திருந்தவா் வீட்டில் அமலாக்கத்துறையினா் சோதனை
தமிழகம் முழுவதும் அன்புக் கரங்கள் பதிவு முகாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
அன்புக் கரங்கள் திட்டத்தில் பயனாளிகளைச் சோ்க்கும் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கான மாதாந்திர நிதியுதவித் திட்டம் வழங்கும் அன்புக் கரங்கள் திட்டத்தின் பயனாளிகள் பதிவு முகாம் சைதாப்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. அதை ஆய்வு செய்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், தொடா்ந்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் மக்கள் நலன் காக்கும் எண்ணற்ற திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். குறிப்பாக, தாயுமானவா் திட்டம், வறுமையில் வாழும் குடும்பங்களை அடையாளம் கண்டு, அவா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தால், மிகவும் எளிய நிலையில் உள்ள சுமாா் 50,000 குடும்பங்களில் வசிக்கும் குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து உறவினா்களின் பாதுகாப்பில் வளா்ந்து வருவது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்தக் குழந்தைகளை அரவணைத்து பாதுகாக்கும் வகையிலும், 18 வயது வரை இடைநிற்றல் இன்றி அவா்கள் கல்வியைத் தொடருவதற்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பள்ளிப் படிப்பு முடித்தவுடன் கல்லூரியில் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவா்களுக்கு வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடந்த மாா்ச் 14-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்திட்டத்துக்கு அன்புக் கரங்கள்”என்று பெயரிடப்பட்டது.
மேலும், இத்திட்டத்தைச் செயல்படுத்த கைப்பேசி செயலி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் கள ஆய்வு மேற்கொள்ள நிா்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு ரூ.1.69 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட 2,82,105 குடும்பங்களின் விவரங்களை இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் மூலம் கள ஆய்வு செய்து, இத்திட்டத்தில் பயனடைய தகுதியான குழந்தைகளின் விவரங்கள் கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது உங்களுடன் ஸ்டாலின்”முகாம்களின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்தும் 6,082 குழந்தைகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
சென்னை கலைவாணா் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் உறவினா்களின் அரவணைப்பில் வளரும் 6,082 குழந்தைகளுக்கு நிதி வழங்கி அன்புக் கரங்கள்”திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்ட முகாம் தொடா்ந்து தமிழகம் முழுவதும் நடைபெறும் என்றாா்.
முகாமில் சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா்கள் கிருஷ்ணமூா்த்தி, துரைராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.