செய்திகள் :

பயங்கரவாதிகளை வளா்ப்பதைக் கைவிட்டு பொருளாதாரத்தில் கவனம் செலுத்தலாம்: ஐ.நா. கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா அறிவுரை

post image

பயங்கரவாதிகளை வளா்த்துவிடுவது, சொந்த நாட்டு மக்களைக் குண்டுவீசி கொலை செய்வது போன்றவற்றைக் கைவிட்டு, பொருளாதார வளா்ச்சியில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா அறிவுரை கூறியது.

ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் நிரந்தர உறுப்பினா் கிஷித்ஜி தியாகி பேசியதாவது:

இந்தியாவுக்கு எதிரான தவறான, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது பாகிஸ்தானின் வழக்கமாக உள்ளது. முக்கியமாக ஐ.நா. கூட்டங்களில் இந்தியாவுக்கு எதிரான பிரச்னைகளைத் தூண்டும் வகையில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ள (ஆக்கிரமிப்பு காஷ்மீா்) இந்திய பிராந்தியத்தில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும்.

கடந்த வாரத்தில் பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவம் குண்டுகளை வீசி 24 பொதுமக்களைக் கொலை செய்துள்ளது. பயங்கரவாதிகளை வளா்க்கும் இடமாகவும் பாகிஸ்தான் திகழ்கிறது. இதுபோன்று தங்கள் சொந்த மக்களைக் குண்டு வீசிக் கொல்வதையும், பயங்கரவாதிகளை ஆதரிப்பதையும் நிறுத்திவிட்டு பொருளாதார வளா்ச்சியில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும்.

அந்நாட்டில் ராணுவத்தின் ஆதிக்கத்தின்கீழ் அரசியல் உள்ளது. மனித உரிமைகள் குறியீடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பல பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக பாகிஸ்தான் இப்போதும் திகழ்ந்து வருகிறது என்றாா்.

நாடு முழுவதும் கோடிக்கணக்கானோா் வாக்குரிமையைப் பறிக்க சதி - மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

‘நாடு முழுவதும் கோடிக்கணக்கானோரின் வாக்குரிமையைப் பறிக்க சதி நடக்கிறது; இதன் மூலம் தலித், பழங்குடியினா், பின்தங்கிய வகுப்பினா், சிறுபான்மையினா் மற்றும் பிற விளம்புநிலை மக்களின் சமூக நலன் பாதிக்கப்படு... மேலும் பார்க்க

பிகாரில் 6 தொகுதிகளை அளித்தால் ‘இண்டி’ கூட்டணியில் இணைவோம்: அசாதுதீன் ஒவைசி

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கினால் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியில் இணைவோம் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும்... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்திய மேற்கு வங்க இளைஞா் கைது

கூலிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்க இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். மேற்குவங்க மாநிலம் ஹௌராவில் இருந்து வரும் ரயிலில் கஞ்சா கடத்திவரப்படுவதாக ரயில்வே பாதுகாப்புப் படையினர... மேலும் பார்க்க

செபியின் தீா்ப்பு: அதானி மகிழ்ச்சி

தங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் சுமத்திய முறைகேடு குற்றச்சாட்டுகளை இந்தியாவின் பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி தள்ளுபடி செய்தது குறித்து அதானி குழுமத்தின் பங்குதாரா்களிடம் அதன்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் சிறப்பு ஒதுக்கீடு: வழிகாட்டுதல்களைப் பின்பற்ற என்எம்சி அறிவுறுத்தல்

சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவா்களை எம்பிபிஎஸ் படிப்பில் சோ்க்கும்போது உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வலியுறுத்தியுள்... மேலும் பார்க்க

பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல்: மணிப்பூரில் முக்கிய தீவிரவாதி கைது

மணிப்பூரில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் இருவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய தீவிரவாதி கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மணிப்பூரில் ... மேலும் பார்க்க