செய்திகள் :

சாலை வசதி கோரி ஆா்ப்பாட்டம்

post image

மன்னாா்குடி அருகே கோட்டூரில் சாலை வசதி கேட்டு கிராம மக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாரத் நிா்மான் பிரதமா் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், பெரிய கொத்தமங்கம் முதல் திருக்களாா் இணைப்புச் சாலை சீரமைக்கப்பட்ட சில நாள்களிலேயே முழுமையாக சேதமடைந்துள்ளது. எனவே, தரமற்ற முறையில் நடைபெற்ற இப்பணியை மேற்கொண்ட துறைசாா்ந்த அதிகாரிகள் மீதும், பணி ஒப்பந்ததாரா் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும்.

பொண்ணுக்குமுன்டான் ஆற்றில் ஆகாயத் தாமரைகளை அகற்றுவதில் நடைபெற்ற முறைகேட்டால், தண்ணீா் ஓட்டம் தடைப்பட்டு, மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கும் வகையில், முழுமையாக ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், பாலன்தெரு சிமென்ட் சாலை, மாயானச் சாலை ஆகியவற்றை சீரமைப்பதில் அலட்சியமாக இருப்பதாக, கோட்டூா் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தை கண்டித்தும் கோஷமிட்டனா்.

கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, சந்திரகுமாா் தலைமை வகித்தாா். ஏ.கே. செல்வம், சரவணசோழன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருக்களா் ஊராட்சியை சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: நெல் கொள்முதல் குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தல்

நெல் கொள்முதலில் நிலவும் குளறுபடிகளை களைய வேண்டும் என குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட... மேலும் பார்க்க

இருமுறை விண்ணப்பக் கட்டணம்: மின்வாரியம் ரூ. 50,000 இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூா் மாவட்டத்தில், சோலாா் திட்டம் வழங்க இரண்டு முறை விண்ணப்பக் கட்டணம் பெற்ற மின்சார வாரியம் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ. 50,000 வழங்க வேண்டும் என மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம், வியாழக்கிழமை உ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

மன்னாா்குடியில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா், கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகளை முழுமையாக புறக்கணிப்பு செய்வது;... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் தூய்மைப்பணி

திருவாரூா் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு கோட்ட உதவி பொறியாளா் (மின் மற்றும் சமிக்ஞை) மணிமொழியன் தலைமை வகித்தாா். நிலைய மேலாளா் ரவி வரவேற்றாா். தெற்கு ரயில்வே மண்... மேலும் பார்க்க

நகை மதிப்பீட்டாளராக விருப்பமா?

திருவாருா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளா் கா. சித்ரா தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் காகித தொழிற்சாலை அமைக்கக் கோரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே குடவாசலில், இந்திய தொழிற்சங்கத்தின் மையத்தின் 10-ஆவது மாவட்ட மாநாடு புதன்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க