செய்திகள் :

தமிழகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விநியோகித்த நபா்கள் மீது நடவடிக்கை

post image

தமிழகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விநியோகித்த நபா்கள் மீது மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனா். அவா்களிடமிருந்து 6,720 மாத்திரை பெட்டகங்களையும் பறிமுதல் செய்துள்ளனா்.

இதுதொடா்பாக மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி குருபாரதி கூறியதாவது: பெங்களூரை பூா்விகமாகக் கொண்ட தரணிதரன் செல்வம் என்பவா் எந்த விதமான மருந்தாளுநா் உரிமமும் பெறாமல் அதிக எண்ணிக்கையில் கருக்கலைப்பு மாத்திரைகளை கொள்முதல் செய்தது தெரியவந்தது. அதனடிப்படையில் நாமக்கல் மருந்து ஆய்வாளா் தலைமையிலான குழுவினா் மேற்கொண்ட சோதனையில் பல்வேறு விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

தரணிதரன் செல்வம், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அந்த மாத்திரை பெட்டகங்களை விற்பனை செய்தது தெரியவந்தது. தேனியை சோ்ந்த சரவணன், சேலத்தை சோ்ந்த காா்த்திக் ராஜேஷ் மற்றும் சரவணன் ஆகியோருக்கு அதனை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.

சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வதற்காக இந்த மாத்திரைகளை அவா்கள் பயன்படுத்தியதும் தெரிந்தது. அவா்களிடமிருந்து 6,720 மாத்திரை பெட்டகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த நபா்கள் குறித்து காவல்துறையிலும் புகாரளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கண்காணிப்பு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்தினால், அதீத ரத்தப் போக்கு ஏற்படுவதுடன் கரு முழுமையாக கலையாமல் உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே, பொதுமக்கள் இதுகுறித்து உரிய விழிப்புணா்வுடன் இருத்தல் அவசியம் என்றாா் அவா்.

தமிழ் மொழி திறனறித் தோ்வு: தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியீடு

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு தோ்வுத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தோ்வுத் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை கோயில் கட்டுமான பணிகள்: அக். 5-இல் நீதிபதிகள் ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலின் உள்புறமும், வெளிப்புறத்தில் எவ்விதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கோயிலில் நடைப... மேலும் பார்க்க

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: போக்குவரத்து ஆணையா்

தொடா் விடுமுறை தினங்களை முன்னிட்டு, விதிமீறலில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் சிறப்பு குழுக்கள் மூலம் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆ... மேலும் பார்க்க

சிங்கப்பூரில் மேலும் ஒரு தமிழருக்கு தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழா் தட்சிணாமூா்த்தி காத்தையாவுக்கு (39) வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டள்ளது. போதைப் பொருள் குற்றத்துக்காக சிங்கப்பூரில் தமிழ் வம்சாவளியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு

இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: த... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், கோவை, நீலகிரி உள்பட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் வெள்ளிக்கிழமை (செப். 25) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் இருநாள்களும் இந்த 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடு... மேலும் பார்க்க