ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்
வெளிநாட்டில் முதுநிலைப் படிப்பு: முஸ்லிம் மாணவா்களுக்கு உதவித்தொகை
முஸ்லிம் மாணவா்கள் வெளிநாட்டில் முதுநிலைப் படிப்பு படிக்க தமிழக அரசின் உதவித் தொகைக்கு அக். 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு, முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு உயா்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் 10 முஸ்லிம் மாணவா்களுக்கு தலா ரூ. 36 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க அரசாணை வெளியிட்டது.
இந்தத் திட்டத்தில் விண்ணப்பதாரா் 2025-26 ஆம் கல்வியாண்டில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கான உலகளாவிய கியூ.எஸ். (குவாக்கரெல்லி சைமண்டஸ்) தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சோ்க்கைக் கடிதம் பெற்றவராக இருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு மிகாமலிருக்க வேண்டும். இளநிலைப் பட்டப் படிப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு இணையாகத் தோ்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், பொறியியல், மேலாண்மை, பயன்பாட்டு அறிவியல், வேளாண்மை அறிவியல், மருத்துவம், சா்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனிதநேய படிப்புகள், சமூக அறிவியல், நுண்கலைப் படிப்புகள், சட்டம் போன்ற பாடப் பிரிவுகளில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கு சோ்க்கை பெற்றவராக இருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பத்தை ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஜ்ங்ப்ச்ள்ஸ்ரீட்ங்ம்ங்ள் ம்ண்ய்ா்ழ்ண்ற்ண்ங்ள்.ட்ற்ம் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ‘ஆணையா், சிறுபான்மையினா் நலத் துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005’ என்ற முகவரிக்கு அக். 31-க்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.