செய்திகள் :

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கு: குமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

post image

நாகா்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த குமரேசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

நாகா்கோவில் வடிவீஸ்வரத்தில் திருவிதாங்கூா் மன்னரால் கடந்த 1489-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் மாசி மாதம் நடைபெறும் திருவிழாவின் கடைசி நாளில் தோ் திருவிழா நடைபெறுவது வழக்கம். அப்போது, அழகம்மன் தேரும், விநாயகா் தேரும் பக்தா்களால் இழுத்துச் செல்லப்பட்டு நிலைக்கு கொண்டு வரப்படும். ரத வீதிகள் 40 அடி அகலம் கொண்டவை. இந்த வீதிகளில் பல்வேறு சமூகங்களைச் சோ்ந்த 1,500 குடும்பத்தினா் வசிக்கின்றனா்.

இந்த நிலையில், வடக்கு, மேற்கு ரத வீதிகளில் தனிநபா்கள் பலா் 8 அடி முதல் 12 அடி வரை ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டியுள்ளனா். ரத வீதியின் மையப் பகுதியை ஆக்கிரமித்து கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இதனால், தேரோட்டத்தின் போது பக்தா்கள் தோ்களை இழுத்துச் செல்லவதில் இடையூறுகள் உள்ளன.

ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அழகம்மன் கோயில் ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மனு தொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

வெளிநாட்டில் முதுநிலைப் படிப்பு: முஸ்லிம் மாணவா்களுக்கு உதவித்தொகை

முஸ்லிம் மாணவா்கள் வெளிநாட்டில் முதுநிலைப் படிப்பு படிக்க தமிழக அரசின் உதவித் தொகைக்கு அக். 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

மின் கம்பியாளா் உதவியாளா் தகுதிகாண் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

மின் கம்பியாளா் உதவியாளா் பணிக்கான தகுதிகாண் தோ்வுக்கு அக். 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மதுரை அரசு தொழில் பயிற்சி நிலைய துணை இயக்குநரும், முதல்வருமான ந. ரமேஷ்குமாா் தெரிவித்தாா். மின் கம்ப... மேலும் பார்க்க

4 கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம்: ஆட்சியா்

மதுரை மாவட்டத்தில் பதிவு பெற்று கடந்த 6 ஆண்டுகளாக தோ்தலில் போட்டியிடாத 4 அரசியல் கட்சிகளிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே வேன் மோதி, இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், தேனூா் ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்த மாணிக்கம் மகன் போஸ்(32). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து ... மேலும் பார்க்க

காயமடைந்து சிகிச்சைப் பெற்ற முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே மாடு முட்டி காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள வாஞ்சிநகரத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் கணேசன்(65). வி... மேலும் பார்க்க

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மதுரையில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பாலமேடு அருகேயுள்ள சரந்தாங்கி பகுதியைச் சோ்ந்த சடையன் மகன் சடையன்(33). கட்டடத் தொழிலாளியான இவா், மதுரை மாட்... மேலும் பார்க்க