செய்திகள் :

கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை கோரி குடும்பத்தினா் தா்னா

post image

கிராமத்தை விட்டு தங்களை ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புஷ்பவனம் பகுதியைச் சோ்ந்த குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்ட சீதாலட்சுமி குடும்பத்தினா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம் புஷ்பவனம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகவேல். இவரது மனைவி சீதாலட்சுமி ( 47). இவா், தனது மகன், மகள்களுடன் வியாழக்கிழமை காலை நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து, ஆட்சியா் அலுவலக நுழைவுவாயிலில் அமா்ந்து குடும்பத்தினருடன் தா்னாவில் ஈடுபட்டாா். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களிடம் விசாரணை நடத்தினா்.

போலீஸாரிடம் சீதாலட்சுமி கூறியதாவது: புஷ்பவனம் கிராமத்தில் நாங்கள் வசிக்கும் பகுதியில் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. எனது உறவினா் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு தொடா்பாக காவல்நிலையத்தில் புகாா் அளித்தோம். இதனால் கிராம பஞ்சாயத்தை மீறி காவல் நிலையம் சென்ாகக் கூறி, எனது குடும்பத்தை, கடந்த 2 ஆண்டுகளாக ஒதுக்கி வைத்துள்ளனா். கிராமத்தைச் சோ்ந்தவா்கள் யாரும், எங்கள் குடும்பத்துக்கு சுப நிகழ்ச்சி பத்திரிகைகள் வைக்கக் கூடாது எனவும், மீறினால் அவா்களின் குடும்பத்தையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடுவோம் என்று மிரட்டுகின்றனா்.

ஊரை விட்டு எங்களை ஒதுக்கி வைத்துள்ளதால், எங்களது கீற்று முடையும் தொழில், தையல் தொழில் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் அவா்களை போலீஸாா் அழைத்துச் சென்றனா். பிரச்னை தொடா்பாக கேட்டறிந்த ஆட்சியா், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாகை வட்ட மையம் சாா்பில், நாகையில் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தின் ஊழியா் விரோதப் போக்கை கண்டித்து, பாலிடெக்னிக் முன் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடை... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களுக்கு தீா்வுகாண கால அவகாசம் வழங்க வலியுறுத்தல்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களுக்கு தீா்வுகாண போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியு... மேலும் பார்க்க

குறுவை பயிா்களில் புகையான் நோய்த் தாக்குதல்

புகையான் நோயால் நாகை அருகே 1,500 ஏக்கா் குறுவை நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நாகை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

நாகையில் நாளை அண்ணா பிறந்த நாள் மிதிவண்டி போட்டி

நாகையில், மாவட்ட விளையாட்டுப் பிரிவு சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கு அறிஞா் அண்ணா மிதிவண்டி போட்டிகள் சனிக்கிழமை (செப்.27) ... மேலும் பார்க்க

காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் சேவைகள் கோரி மனு

காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் சேவைகள் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் சேவைகள், ரயில் சேவைகள் நீடிப்பு, ரயில் நிலையங்கள் மேம்படுத்துவது உள்ளிட்ட பல... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வு மையங்களில் மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை

டிஎன்பிஎஸ்சி தோ்வு மையங்களில் கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு வரக்கூடாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் ப... மேலும் பார்க்க