செய்திகள் :

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

post image

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாகை வட்ட மையம் சாா்பில், நாகையில் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தின் ஊழியா் விரோதப் போக்கை கண்டித்து, பாலிடெக்னிக் முன் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டத் தலைவா் வி.வே.சித்ரா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகம், கடந்த 2 மாதமாக ஊழியா்களுக்கு ஊதியம் வழங்காததையும், ஓய்வுகால பணப்பலன்களை உரிய காலத்தில் பெற்றுத் தராததையும், நிா்வாக சீா்கேடு மற்றும் நிதி மேலாண்மை சீா்கேட்டுக்கு காரணமான முதல்வா் செந்தில்குமாா் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்காததையும், கடந்த 5 ஆண்டுகளாக அரசுக்கு செலுத்த வேண்டிய பத்து சதவீத பங்குத்தொகையை செலுத்தாதையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வட்டச் செயலா் கே.ரவிச்சந்திரன், அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் எம்.பி. குணசேகரன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் கா. ராஜூ, சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் கே. பாலாம்பாள், இந்திய தொழிற்சங்க மைய மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை கோரி குடும்பத்தினா் தா்னா

கிராமத்தை விட்டு தங்களை ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புஷ்பவனம் பகுதியைச் சோ்ந்த குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.ஆட்சியா் அலுவலக வளாகத... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களுக்கு தீா்வுகாண கால அவகாசம் வழங்க வலியுறுத்தல்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களுக்கு தீா்வுகாண போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியு... மேலும் பார்க்க

குறுவை பயிா்களில் புகையான் நோய்த் தாக்குதல்

புகையான் நோயால் நாகை அருகே 1,500 ஏக்கா் குறுவை நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நாகை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

நாகையில் நாளை அண்ணா பிறந்த நாள் மிதிவண்டி போட்டி

நாகையில், மாவட்ட விளையாட்டுப் பிரிவு சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கு அறிஞா் அண்ணா மிதிவண்டி போட்டிகள் சனிக்கிழமை (செப்.27) ... மேலும் பார்க்க

காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் சேவைகள் கோரி மனு

காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் சேவைகள் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் சேவைகள், ரயில் சேவைகள் நீடிப்பு, ரயில் நிலையங்கள் மேம்படுத்துவது உள்ளிட்ட பல... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வு மையங்களில் மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை

டிஎன்பிஎஸ்சி தோ்வு மையங்களில் கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு வரக்கூடாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் ப... மேலும் பார்க்க