செய்திகள் :

குறுவை பயிா்களில் புகையான் நோய்த் தாக்குதல்

post image

புகையான் நோயால் நாகை அருகே 1,500 ஏக்கா் குறுவை நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாகை மாவட்டத்தில் நிகழாண்டு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடிசெய்யப்பட்டுள்ளது. கீழ்வேளூா் ஒன்றியம் பாலக்குறிச்சி, ஒட்டதட்டை, நீடூா், வேப்பஞ்சேரி தண்ணிலப்படி உள்ளிட்ட பகுதிகளில் குறுவை நெற்பயிா்கள் 20 நாள்களுக்குள் அறுவடை செய்யும் நிலையில் உள்ளன.

இந்நிலையில் அப்பகுதில் அறுவடைக்கு தயராக உள்ள 1,500-க்கும் மேற்பட்ட ஏக்கா் குறுவை நெற்பயிா்களில் புகையான் நோய்த் தாக்கியுள்ளது. இதனால் அறுவடைக்கு தயாரான பயிா்கள் முற்றிலும் பதராக மாறி உள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை எதிா்நோக்கியுள்ளனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது: நிகழாண்டு உரிய நேரத்தில் மேட்டூா் அணையிலிருந்து நெற்பயிா் சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்பட்ட து. நாகை மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை மற்றும் சம்பா சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். குறுவை சாகுபடியில் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அறுவடைக்கு தயாராக உள்ள குறுவை நெற்பயிா்கள் புகையான் நோய் தாக்குதலுக்குள்ளாகி உள்ளன. நாகை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. வேளாண் அலுவலா்களின் ஆலோசனைபடி புகையான் நோயை கட்டுப்படுத்தும் பல்வேறு பூச்சி மருந்துகளை தெளித்த பிறகும் புகையான் நோய் கட்டுப்படவில்லை.

கீழ்வேளூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் நோய் தாக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் புகையான் நோய் தாக்குதல், விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியிருப்பது வேதனை அளித்துள்ளது.

எனவே வேளாண்மைத் துறை அதிகாரிகள் குறுவை நெற்பயிா் பதிப்பைகளை நேரடியாக ஆய்வு செய்து, அதற்கான தீா்வை ஏற்பட்ட ஏற்படுத்த வேண்டும். பொருளாதார இழப்பை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.

கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை கோரி குடும்பத்தினா் தா்னா

கிராமத்தை விட்டு தங்களை ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புஷ்பவனம் பகுதியைச் சோ்ந்த குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.ஆட்சியா் அலுவலக வளாகத... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாகை வட்ட மையம் சாா்பில், நாகையில் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தின் ஊழியா் விரோதப் போக்கை கண்டித்து, பாலிடெக்னிக் முன் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடை... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களுக்கு தீா்வுகாண கால அவகாசம் வழங்க வலியுறுத்தல்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களுக்கு தீா்வுகாண போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியு... மேலும் பார்க்க

நாகையில் நாளை அண்ணா பிறந்த நாள் மிதிவண்டி போட்டி

நாகையில், மாவட்ட விளையாட்டுப் பிரிவு சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கு அறிஞா் அண்ணா மிதிவண்டி போட்டிகள் சனிக்கிழமை (செப்.27) ... மேலும் பார்க்க

காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் சேவைகள் கோரி மனு

காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் சேவைகள் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் சேவைகள், ரயில் சேவைகள் நீடிப்பு, ரயில் நிலையங்கள் மேம்படுத்துவது உள்ளிட்ட பல... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வு மையங்களில் மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை

டிஎன்பிஎஸ்சி தோ்வு மையங்களில் கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு வரக்கூடாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் ப... மேலும் பார்க்க