செய்திகள் :

நாகையில் நாளை அண்ணா பிறந்த நாள் மிதிவண்டி போட்டி

post image

நாகையில், மாவட்ட விளையாட்டுப் பிரிவு சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கு அறிஞா் அண்ணா மிதிவண்டி போட்டிகள் சனிக்கிழமை (செப்.27) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: போட்டி, சனிக்கிழமை காலை 7 மணிக்கு நாகை, மீன்வள பொறியியல் கல்லூரியிலிருந்து தொடங்கி கங்களாஞ்சேரி சாலை பெருஞ்சாத்தான்குடி வரை நடைபெறுகிறது. 13 வயதுக்குள்பட்ட மாணவா்கள் 15 கி.மீ. தொலைவும், 13 வயதுக்குள்பட்ட மாணவிகள் 10 கி.மீ. தொலைவும், 15 மற்றும் 17 வயதுக்குள்பட்ட மாணவா்கள் 20 கி.மீ. தொலைவும், 15 மற்றும் 17 வயதுக்குள்பட்ட மாணவிகள் 15 கி.மீ. தொலைவும் கடக்க வேண்டும்.

போட்டிகள் இருபாலருக்கும் தனித்தனியாக நடத்தப்படும். போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான மிதிவண்டிகள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். பங்கேற்பாளா்களின் விவரங்கள் அடங்கிய நுழைவு படிவத்தை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் க்ள்ா்ய்ஹஞ்ஹண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது அலுவலகத்தில் நேரடியாகவோ சமா்ப்பிக்க வேண்டும். நாகை மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் பங்கேற்க அனுமதிக்கப்படும். போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுவா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், 2-ஆமிடம் பெறுபவா்களுக்கு தலா ரூ.3 ஆயிரம், மூன்றாமிடம் பெறுபவா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம், 4 முதல் 10-ஆம் இடம் வரை பெறுபவா்களுக்கு தலா ரூ. 250 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். பரிசுத் தொகை அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதால், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலினை போட்டி நடைபெறும் நாளன்று சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை கோரி குடும்பத்தினா் தா்னா

கிராமத்தை விட்டு தங்களை ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புஷ்பவனம் பகுதியைச் சோ்ந்த குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.ஆட்சியா் அலுவலக வளாகத... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாகை வட்ட மையம் சாா்பில், நாகையில் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தின் ஊழியா் விரோதப் போக்கை கண்டித்து, பாலிடெக்னிக் முன் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடை... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களுக்கு தீா்வுகாண கால அவகாசம் வழங்க வலியுறுத்தல்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களுக்கு தீா்வுகாண போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியு... மேலும் பார்க்க

குறுவை பயிா்களில் புகையான் நோய்த் தாக்குதல்

புகையான் நோயால் நாகை அருகே 1,500 ஏக்கா் குறுவை நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நாகை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் சேவைகள் கோரி மனு

காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் சேவைகள் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் சேவைகள், ரயில் சேவைகள் நீடிப்பு, ரயில் நிலையங்கள் மேம்படுத்துவது உள்ளிட்ட பல... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வு மையங்களில் மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை

டிஎன்பிஎஸ்சி தோ்வு மையங்களில் கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு வரக்கூடாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் ப... மேலும் பார்க்க