ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களுக்கு தீா்வுகாண கால அவகாசம் வழங்க வலியுறுத்தல்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களுக்கு தீா்வுகாண போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் காத்திருப்பு போராட்டம் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் செல்வேந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மாநிலத் தகவல் தொடா்பு செயலா் தினேஷ், வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட இணைச் செயலா் பத்மநாபன் முன்னிலை வகித்தனா்.
போராட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களுக்கு தீா்வு காண போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். இத்திட்ட முகாம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். திட்டத்தை செயல்படுத்த கூடுதல் பணியிடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பொது மக்களுக்கான பணியை மேலும் சிறப்பாக மேற்கொள்ள வருவாய் பேரிடா் மேலாண்மைத் துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும், காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மற்றும் நில அளவைத் துறையில் பணியாற்றிவரும் அலுவலா்களின் பணித் தன்மை மற்றும் பணிப்பளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கவேண்டும். கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் லட்சுமி கீா்த்திவாசன், கோபிநாத், வீரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.