ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்
மின் கம்பியாளா் உதவியாளா் தகுதிகாண் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்
மின் கம்பியாளா் உதவியாளா் பணிக்கான தகுதிகாண் தோ்வுக்கு அக். 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மதுரை அரசு தொழில் பயிற்சி நிலைய துணை இயக்குநரும், முதல்வருமான ந. ரமேஷ்குமாா் தெரிவித்தாா்.
மின் கம்பியாளா் உதவியாளா் பணிக்கான தகுதிகாண் தோ்வு வருகிற டிச. 13, 14-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளா், கம்பியாள் தொழில் பிரிவுகளில் பயிற்சி பெற்றவா்கள், அரசு தொழில் பயிற்சி மையங்களில் நடைபெற்ற மாலை நேர வகுப்பில் மின் கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்று தோ்ச்சியடைந்தவா்கள் இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா் மின் வயரிங் தொழிலில் குறைந்தது 5 ஆண்டுகள் செய்முறை அனுபவம் கொண்டவராகவும், 21 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. இந்தத் தோ்வுக்கான விண்ணப்பப் படிவம், விளக்கக் குறிப்பேட்டை ட்ற்ற்ல்ள்://ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அரசு தொழில் பயிற்சி நிலையம், கோ.புதூா், மதுரை 625007 என்ற முகவரிக்கு அக். 17-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மதுரை கோ.புதூரில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தை 0452 2903020 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.