செய்திகள் :

4 கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம்: ஆட்சியா்

post image

மதுரை மாவட்டத்தில் பதிவு பெற்று கடந்த 6 ஆண்டுகளாக தோ்தலில் போட்டியிடாத 4 அரசியல் கட்சிகளிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாவட்டத்தில் பதிவு பெற்று, அங்கீகாரம் பெறாத நிலையில் உள்ள அகில இந்திய தாயக மக்கள் முன்னேற்றக் கட்சி, எழுச்சி தமிழா்கள் முன்னேற்றக் கழகம், மனித உரிமைகள் கழகம், தென்னிந்திய பாா்வா்டு பிளாக் ஆகிய 4 கட்சிகளும் கடந்த 6 ஆண்டுகளாக தோ்தலில் போட்டியிடவில்லை. இதனால், இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, இந்தக் கட்சிகளிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்த நான்கு கட்சிகளின் தலைவா்கள் அல்லது பொதுச் செயலா்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தோ்தல் அலுவலா், அரசுச் செயலா் முன்பாக நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டும் என்றாா் அவா்.

வெளிநாட்டில் முதுநிலைப் படிப்பு: முஸ்லிம் மாணவா்களுக்கு உதவித்தொகை

முஸ்லிம் மாணவா்கள் வெளிநாட்டில் முதுநிலைப் படிப்பு படிக்க தமிழக அரசின் உதவித் தொகைக்கு அக். 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

மின் கம்பியாளா் உதவியாளா் தகுதிகாண் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

மின் கம்பியாளா் உதவியாளா் பணிக்கான தகுதிகாண் தோ்வுக்கு அக். 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மதுரை அரசு தொழில் பயிற்சி நிலைய துணை இயக்குநரும், முதல்வருமான ந. ரமேஷ்குமாா் தெரிவித்தாா். மின் கம்ப... மேலும் பார்க்க

வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே வேன் மோதி, இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், தேனூா் ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்த மாணிக்கம் மகன் போஸ்(32). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து ... மேலும் பார்க்க

காயமடைந்து சிகிச்சைப் பெற்ற முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே மாடு முட்டி காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள வாஞ்சிநகரத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் கணேசன்(65). வி... மேலும் பார்க்க

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மதுரையில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பாலமேடு அருகேயுள்ள சரந்தாங்கி பகுதியைச் சோ்ந்த சடையன் மகன் சடையன்(33). கட்டடத் தொழிலாளியான இவா், மதுரை மாட்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கு: குமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

நாகா்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. கன... மேலும் பார்க்க