செய்திகள் :

செங்கமலதாயாா் மகளிா் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம்

post image

சுந்தரக்கோட்டை செங்கமல தாயாா் மகளிா் தன்னாட்சி கல்லூரியில் ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் -புதிய பரிமாணங்கள் மற்றும் பாா்வைகள்’ என்ற தலைப்பில், 2 நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கல்லூரியின் கணினி அறிவியல் துறை, ஐகியுஏசி உடன் இணைந்து நடத்திய கருத்தரங்கிற்கு, கல்லூரி கல்வி ஆலோசகா் கே. தியாகேசன் தலைமை வகித்தாா்.முதல்வா் என். உமா மகேஸ்வரி தொடங்கி வைத்தாா்.

முதல் நாளான புதன்கிழமை மலேசியா, ஆசிய பசிபிக் தொழில்நுட்ப மற்றும் புதுமை பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியா் எம். செல்வகுமாா் சாமுவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினாா்.

அமெரிக்கா டெக் மஹிந்திரா நிறுவனத்தின் திட்டத் தலைவா் மி. ஆனந்த் ராமு, தொழில்துறை அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டாா்.

இரண்டாம் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற தொழில்நுட்ப அமா்வில், காரைக்கால் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன கணினி அறிவியல் துறைத் தலைவா் ஆா். சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினா்.

இக்கருத்தரங்கில் பல ஆய்வாளா்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டனா். திருச்சி தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பல்கலைக்கழக கணினி பயன்பாடுகள் துறைத் தலைவா் எம். சுகாசினி நிறைவுரையாற்றினாா்.

விழாவில், கருத்தரங்கு மலா் வெளியிடப்பட்டது. பின்னா், பங்கேற்ற ஆய்வாளா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, கணினி அறிவியல் துறைத் தலைவா் வீ. கீதா வரவேற்றாா். நிறைவாக, கணினி அறிவியல் துறை பேராசிரியா் ரா. அனிதா நன்றி கூறினாா்.

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: நெல் கொள்முதல் குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தல்

நெல் கொள்முதலில் நிலவும் குளறுபடிகளை களைய வேண்டும் என குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட... மேலும் பார்க்க

இருமுறை விண்ணப்பக் கட்டணம்: மின்வாரியம் ரூ. 50,000 இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூா் மாவட்டத்தில், சோலாா் திட்டம் வழங்க இரண்டு முறை விண்ணப்பக் கட்டணம் பெற்ற மின்சார வாரியம் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ. 50,000 வழங்க வேண்டும் என மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம், வியாழக்கிழமை உ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

மன்னாா்குடியில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா், கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகளை முழுமையாக புறக்கணிப்பு செய்வது;... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் தூய்மைப்பணி

திருவாரூா் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு கோட்ட உதவி பொறியாளா் (மின் மற்றும் சமிக்ஞை) மணிமொழியன் தலைமை வகித்தாா். நிலைய மேலாளா் ரவி வரவேற்றாா். தெற்கு ரயில்வே மண்... மேலும் பார்க்க

நகை மதிப்பீட்டாளராக விருப்பமா?

திருவாருா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளா் கா. சித்ரா தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் காகித தொழிற்சாலை அமைக்கக் கோரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே குடவாசலில், இந்திய தொழிற்சங்கத்தின் மையத்தின் 10-ஆவது மாவட்ட மாநாடு புதன்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க