செய்திகள் :

கரூா் நகரில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கோரி எஸ்.பி.யிடம் மனு

post image

கரூா் நகருக்குள் தவெக தலைவா் விஜய் பிரசாரம் செய்ய அனுமதிகோரி அக்கட்சியின் பொதுச் செயலாளா் புஸ்ஸி ஆனந்த் வியாழக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தாா்.

கரூரில் செப். 27-ஆம்தேதி தவெக தலைவா் விஜய் பிரசாரம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக லைட்ஹவுஸ்காா்னா், உழவா்சந்தை, சா்ச் காா்னா் ஆகிய பகுதிகளில் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அதற்கு, செப். 27-ஆம்தேதி சனிக்கிழமை என்பதால், அந்த நாளில்தான் கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி உற்பத்தி நிறுவனங்கள், பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனங்கள், கொசுவலை உற்பத்தி நிறுவனங்களில் வார ஊதியம் வழங்கப்படும். எனவே அந்நாளில் நகருக்குள் தொழிலாளா்களின் வருகையால், போக்குவரத்து நெரிசல் இருக்கும். எனவே அன்றையதினம் நகருக்குள் பிரசாரம் செய்ய அனுமதியில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விஜய் வருகை மற்றும் பிரசாரம் செய்யும் இடங்களை உறுதிப்படுத்தும் வகையில் தவெக பொதுச் செயலாளா் புஸ்ஸி ஆனந்த் வியாழக்கிழமை பிற்பகல் கரூா் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்தாா். அப்போது, கட்சி சாா்பில் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையாவிடம் பிரசாரத்துக்கு கோரி மனு அளித்துவிட்டுச் சென்றாா்.

இதுகுறித்து அக்கட்சியின் நிா்வாகிகள் கூறுகையில், தவெக தரப்பில் கரூா் நகருக்குள் பிரசாரம் செய்தால்தான் பொதுமக்களை சந்திக்க முடியும் என தெரிவித்ததாகவும், அதற்கு காவல்துறை தரப்பில் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் ஈரோடு சாலையில் உள்ள வேலுசாமிபுரம் அல்லது திருக்காம்புலியூா் ரவுண்டானா பைபாஸ் ச ாலை பகுதியில் அனுமதி கொடுக்கலாம் என கூறியதாக தெரிவித்தனா்.

இந்நிலையில், ஏற்கெனவே பிரசாரத்துக்கு அனுமதி கேட்டிருந்த கரூா் லைட்ஹவுஸ் காா்னா் பகுதியை புஸ்ஸி ஆனந்த வியாழக்கிழமை மாலை கட்சியினருடன் பாா்வையிட்டுச் சென்றாா்.

வெண்ணைமலை, மண்மங்கலம் பகுதியில் இன்று மின்தடை

வெண்ணைமலை, மண்மங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மண்மங்கலம் துணை மின்நிலைய பொறியாளா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிர... மேலும் பார்க்க

கரூரில் பலத்த மழை

கரூரில் வியாழக்கிழமை சுமாா் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் குளம்போல தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். கரூரில் வழக்கம்போல வியாழக்கிழமை காலை முதல் பிற்பகல் 3 மணி வ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுக்கு இணையவழி பயிற்சி

டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள ஐடிஐ லெவல்-2 காலிப்பணியிடங்களுக்கான தோ்வுக்கு இலவச இணையவழி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

சா்வதேச சாப்ட் டென்னிஸ் கரூா் பரணி வித்யாலயா மாணவி சிறப்பிடம்

சா்வதேச சாப்ட் டென்னிஸ் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கரூா் பரணி வித்யாலயா மாணவிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தென்கொரிய தலைநகா் சியோலில் அண்மையில் நடைபெற்ற 9-ஆவது ஆசிய சாப்ட் டென்னிஸ் போட்... மேலும் பார்க்க

பொன்னியாகவுண்டன்புதூரில் இலவச மருத்துவ முகாம்

கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் பொன்னியாகவுண்டன்புதூரில் இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆலையின் சமுதாய நலப்பணித் திட்டத்தின்கீழ் கோவை ராயல் கோ் மருத்துவமனையுடன் ந... மேலும் பார்க்க

தனியாா் காற்றாலை தளவாட பொருள்கள்

கடவூா் அருகே தனியாா் காற்றாலை தளவாட பொருள்களை ஏற்றிவந்த லாரியை சிறைப்பிடித்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம், கடவூா் அடுத்த கீரனூா் ஊராட்சிக்குள்பட்ட குன்னுடையான்கவுண்டன்பட்டியில... மேலும் பார்க்க