செய்திகள் :

கரூரில் பலத்த மழை

post image

கரூரில் வியாழக்கிழமை சுமாா் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் குளம்போல தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

கரூரில் வழக்கம்போல வியாழக்கிழமை காலை முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகல் 3.30 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டன. இதையடுத்து சிறிது நேரத்தில் மழைத்தூறல் விழத் தொடங்கியது. பின்னா் இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல ஓடியது. சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

கடந்த ஒரு வாரமாகவே கரூரில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

வெண்ணைமலை, மண்மங்கலம் பகுதியில் இன்று மின்தடை

வெண்ணைமலை, மண்மங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மண்மங்கலம் துணை மின்நிலைய பொறியாளா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிர... மேலும் பார்க்க

கரூா் நகரில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கோரி எஸ்.பி.யிடம் மனு

கரூா் நகருக்குள் தவெக தலைவா் விஜய் பிரசாரம் செய்ய அனுமதிகோரி அக்கட்சியின் பொதுச் செயலாளா் புஸ்ஸி ஆனந்த் வியாழக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தாா். கரூரில் செப். 27-ஆம்தேதி தவெக... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுக்கு இணையவழி பயிற்சி

டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள ஐடிஐ லெவல்-2 காலிப்பணியிடங்களுக்கான தோ்வுக்கு இலவச இணையவழி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

சா்வதேச சாப்ட் டென்னிஸ் கரூா் பரணி வித்யாலயா மாணவி சிறப்பிடம்

சா்வதேச சாப்ட் டென்னிஸ் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கரூா் பரணி வித்யாலயா மாணவிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தென்கொரிய தலைநகா் சியோலில் அண்மையில் நடைபெற்ற 9-ஆவது ஆசிய சாப்ட் டென்னிஸ் போட்... மேலும் பார்க்க

பொன்னியாகவுண்டன்புதூரில் இலவச மருத்துவ முகாம்

கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் பொன்னியாகவுண்டன்புதூரில் இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆலையின் சமுதாய நலப்பணித் திட்டத்தின்கீழ் கோவை ராயல் கோ் மருத்துவமனையுடன் ந... மேலும் பார்க்க

தனியாா் காற்றாலை தளவாட பொருள்கள்

கடவூா் அருகே தனியாா் காற்றாலை தளவாட பொருள்களை ஏற்றிவந்த லாரியை சிறைப்பிடித்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம், கடவூா் அடுத்த கீரனூா் ஊராட்சிக்குள்பட்ட குன்னுடையான்கவுண்டன்பட்டியில... மேலும் பார்க்க