செய்திகள் :

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் விலகல்!

post image

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளனர். இந்தத் தொடர் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.

இந்தத் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 15 பேர் கொண்ட இந்திய அணியும் நேற்று(செப்.26) அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால், அந்த அணி பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இதனால், அவருக்குப் பதிலாக 22 வயதான ஜோஹன் லெய்ன் முதல் முறையாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு விளையாட அழைக்கப்பட்டுள்ளார்.

ஜோஹன் லெய்ன்...

இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, “வங்கதேசத்துக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்காக அக்டோபர் 18 முன்னர், ஷமர் ஜோசப்பின் காயம் பற்றி மறுமதிப்பீடு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு அறிமுகமான ஷமர் ஜோசப் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க் டெஸ்ட் போட்டியின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிகழாண்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அருமையாக விளையாடி 3 போட்டிகளில் 17 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

மொத்தமாக 11 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளயாடி 51 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஷமர் ஜோசப், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

பார்படோஸைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஜோஹன் லெய்ன், 19 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 495 ரன்களும், 66 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். அதில், 4 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க... கருண் நாயரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியா? - அஜித் அகர்கர் சூசகம்!

Injured Shamar Joseph ruled out of India Tests

பஹல்காம் தாக்குதல் குறித்த கருத்து: இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு 30% அபராதம்

பஹல்காம் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தமைக்காக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஆசிய கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக... மேலும் பார்க்க

சூப்பர் 4 சுற்று கடைசிப் போட்டி: இந்தியா பேட்டிங்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சூற்றின் கடைசிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றின் கடைசி... மேலும் பார்க்க

அதிகம் அழுத்தம் எடுத்துக்கொள்ளப் போவதில்லை; உலகக் கோப்பை குறித்து ஹர்மன்பீரித் கௌர்!

உலகக் கோப்பைத் தொடர் குறித்து அதிகம் அழுத்தம் எடுத்துக்கொள்ளப் போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம... மேலும் பார்க்க

கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; பாக். வீரர்களுக்கு பயிற்சியாளர் அறிவுரை!

பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் அறிவுரை வழங்கியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூ... மேலும் பார்க்க

தோனியும், கோலியும்கூட துப்பாக்கியால் சுடுவது போல் சைகை செய்துள்ளனர்! - பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான்

துப்பாக்கியால் சுடுவது போன்ற சைகை அரசியல் அல்ல; இதனை இந்திய கேப்டன்கள் தோனியும் விராட் கோலியும்கூட செய்துள்ளனர் என பாகிஸ்தான் வீரர் ஷாஹிப்ஸாதா ஃபர்ஹான் ஐசிசி விசாரணையில் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை ... மேலும் பார்க்க

ஷகிப் அல் ஹசனின் சாதனையை முறியடித்த முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

சர்வதேச டி20 போட்டிகளில் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசனின் சாதனையை அந்த அணியின் சக வீரரான முஸ்தஃபிசூர் ரஹ்மான் முறியடித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் துபையில் நேற்று (செப்டம்... மேலும் பார்க்க