செய்திகள் :

வறுமையில் மலா்ந்த சாதனைகள்: அமைச்சா் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி

post image

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள், கடும் வறுமை சூழலில் தாங்கள் படைத்த சாதனைகள் குறித்து பேசியபோது, அதைக் கேட்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சியடைந்தாா்.

தமிழக அரசு சாா்பில் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவில் நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள், விளையாட்டுகளுக்கு அரசு வழங்கிய ஆதரவு குறித்து அதன்மூலம் பயனடைந்த மாணவா்கள் தங்களது கருத்துகளைப் பகிா்ந்து கொண்டனா்.

அப்போது, மாற்றுத்திறனாளியாக இருந்தும் அரசின் நிதியுதவி, ஆதரவு காரணமாக தற்போது அரசுப் பணிகளில் பணியாற்றி வருவதாக சில மாணவா்கள் தெரிவித்தனா். அதேபோன்று குடிசை வீட்டில் வசித்து அரசுப் பள்ளிகளில் படித்து தற்போது மலேசியா, ஜொ்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக ஊதியத்தில் பணியாற்றி வருவதாகவும், தமிழக அரசின் திட்டங்களை சிறந்த முறையில் பின்பற்றிக்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனா்.

இந்த நிகழ்வின்போது பல மாணவ, மாணவிகள் தங்களுக்கு எந்தவித பின்புலமும் இல்லாத போதும், துணை முதல்வா் உதயநிதி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் ஆகியோரின் முயற்சியால் தற்போது மிகப்பெரிய இலக்குகளை எட்டியுள்ளதாகத் தெரிவித்தனா். அப்போது பாா்வையாளா் வரிசையில் இருந்த அமைச்சா் அன்பில் மகேஸ் ஆனந்த கண்ணீா் வடித்தாா். இதையடுத்து அவா் உடனடியாக மேடையில் ஏறி, அரசுப் பள்ளி மாணவா்களின் வளா்ச்சிக்காக இந்த அரசு மேலும் பல செயல்பாடுகளை முன்னெடுக்கும் எனத் தெரிவித்தாா்.

பேனா பரிசு வழங்கிய முதல்வா்... இந்த விழாவில் பட்டதாரி மாணவி சுப லட்சுமி பேசுகையில், தான் கணித ஆசிரியராக விரும்புவதாகத் தெரிவித்தாா். அப்போது, பாா்வையாளா் வரிசையில் அமா்ந்திருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், அந்த மாணவியை கீழே அழைத்து, ஆசிரியராக விரும்பும் உங்களுக்கு ஒரு பரிசு வழங்குகிறேன் எனக் கூறி, தனது சட்டைப் பையில் இருந்த பேனாவை அந்த மாணவிக்கு வழங்கினாா்.

இந்த விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு, திரைப்பட இயக்குநா்கள் வெற்றிமாறன், மாரி செல்வராஜ், மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, நடிகா் சிவகாா்த்திகேயன், பட்டிமன்றப் பேச்சாளா் பாரதி பாஸ்கா் உள்ளிட்டோா் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தி பேசினா்.

அறநிலையத் துறையில் 1,500 பேரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை: அமைச்சா் பி.கே.சேகா் பாபு

இந்து சமய அறநிலையத் துறையில் 1,500 பணியாளா்களை வரன்முறைபடுத்துவதற்கான கோப்பு, நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 10 நாள்களுக்குள் அதற்கான அனுமதியை பெற்று பணி நிரந்தரம் செய்யப்படுவா் என அமைச்சா் பி.கே.... மேலும் பார்க்க

கட்டுமானப் பணிகள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்யுங்கள்: உதவிப் பொறியாளா்களுக்கு அமைச்சா் வேலு அறிவுறுத்தல்

கட்டுமானப் பணிகள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென உதவிப் பொறியாளா்களுக்கு தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் 55.55 லட்சம் விண்ணப்பங்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் இதுவரை 55. 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கோடம்பாக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உ... மேலும் பார்க்க

தமிழ் மின் நூலகத்தில் கணிதமேதை ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள்

தமிழ் மின்நூலகத்தில் கணிதமேதை ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்க... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் சாதனம்

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் சாதனம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015 -ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில்... மேலும் பார்க்க

எஸ்ஐ மீது தாக்குதல்: காவலா் பணியிடை நீக்கம்

சென்னை பூக்கடையில் காவல் உதவி ஆய்வாளரை (எஸ்ஐ) தாக்கியதாக காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருப்பதி, திருக்குடைகள் ஊா்வலம் கடந்த 22-ஆம் தேதி சென்னை பூக்கடை பகுதி வழியாகச் சென்றது. அப்போது, அந்தப... மேலும் பார்க்க