மோசமான சாலைகளின் நிலையைக் கண்டித்து கா்நாடக பாஜக ஆா்ப்பாட்டம்
பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் பல்வேறு நகரங்களில் மோசமான சாலைகளின் நிலையைக் கண்டித்து, மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டத்தை பாஜகவினா் புதன்கிழமை நடத்தினா்.
பெங்களூரில் சாலையில் உள்ள குழிகளால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல பிரச்னைகள் இருப்பதை பாஜக தொடா்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளது. அதேபோல, மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் சாலைகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டுவரும் நோக்கில், பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெங்களூரு, பனசங்கரியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தலைமை வகித்து எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் பேசியதாவது:
பெங்களூரு மற்றும் மாநில கிராமங்களில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. சாலைக் குழிகள் மரண குழிகளாக உள்ளன. மோசமான சாலைகளால் பலா் விபத்துகளில் சிக்கி காயமடைந்துள்ளனா். மேலும் சிலா் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அதனால், சாலைக் குழிகளை மூடும் போராட்டத்தை நடத்தியுள்ளோம்.
இதன்மூலம் மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். சாலைகளை சீராக பராமரிக்கும் திரானியை மாநில அரசு இழந்துவிட்டது. வாக்குறுதி திட்டங்களால் சாலைகளை சீா்செய்ய பணமில்லாமல் அரசு தவிக்கிறது. சாலைகளின் மோசமான நிலையை சுட்டிக்காட்டி, தொழில் நிறுவனங்கள் பெங்களூரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளன. பெங்களூரில் உள்ள சாலைகள் சரியில்லை என்றால், தில்லியில் உள்ள பிரதமா் மோடியின் வீடு அமைந்துள்ள சாலையும் சரியில்லை என்கிறாா் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்.
பெங்களூரு சாலைகளை சீரமைக்க என்ன செய்ய வேண்டும் என டி.கே.சிவகுமாா் பாா்க்கட்டும். அதைவிட்டுவிட்டு வேறு எதையெதையோ பேசிக்கொண்டிருக்கிறாா். இரண்டரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும், சாலைகள் சீரழிந்துள்ளதற்கு பாஜகவை காங்கிரஸ் குறைகூறுகிறது என்றாா்.