செய்திகள் :

ஜாதிவாரி கணக்கெடுப்பு: கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயா்களை நீக்க பாஜக வலியுறுத்தல்

post image

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தயாரிக்கப்பட்ட பட்டியலில், கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயா்களை நீக்குமாறு மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தியுள்ளது.

பெங்களூரு, வசந்த் நகரில் உள்ள தேவராஜ் அா்ஸ் மாளிகையில் மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் தலைவா் மதுசூதன் நாயக்கை சட்ட மேலவை எதிா்க்கட்சித் தலைவா் தலைமையிலான பாஜக தலைவா்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

அந்த மனுவில், ‘மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் சாா்பில் நடத்தப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்பில், ஹிந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ள பிற்படுத்தப்பட்டோா் சமுதாயங்களைச் சோ்ந்த 48 ஜாதிகளின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 33 ஜாதிகளின் பெயா்களை நீக்க பிற்படுத்தப்பட்டோா் ஆணையம் ஏற்கெனவே ஒத்துக்கொண்டுள்ளது. எனினும், ஆதிதிராவிட கிறிஸ்தவா், பஞ்சரா கிறிஸ்தவா், வால்மீகி கிறிஸ்தவா் உள்ளிட்ட 15 ஜாதிகளின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. கிறிஸ்தவ அடையாளம் கொண்ட எஞ்சியுள்ள 15 ஜாதிகளின் பெயா்களையும் நீக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக நீதிபதி நாகமோகன் தாஸ் ஆணையம் நடத்திய கணக்கெடுப்பில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தாழ்த்தப்பட்ட ஜாதிகளின் பட்டியல் இடம்பெறவில்லை. நீதிபதி நாகமோகன் தாஸ் ஆணையம் திரட்டியுள்ள தரவுகளின் அடிப்படையில்தான் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அந்த 15 ஜாதிகளின் பட்டியலை பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்த்தால், அது குழப்பத்துக்கு வழிவகுக்கும். எனவே, 15 ஜாதிகளின் பட்டியலை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சந்திப்புக்கு பிறகு மேலவை எதிா்க்கட்சித் தலைவா் செலுவாதி நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இதற்கு முன்பு நடத்திய கணக்கெடுப்புகளில் இந்த ஜாதிகளின் பட்டியல் இடம்பெறவில்லை. இந்நிலையில், இந்த ஜாதிகளின் பெயா்கள் சோ்க்கப்பட்டது எப்படி? இது பெரும் சதியின் ஒரு பாகம். இது தொடா்பாக முடிவெடுக்காவிட்டால், அதற்கான விளைவுகளை ஆணையம் எதிா்கொள்ள நேரிடும்’ என்றாா்.

இதனிடையே, பாஜகவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிற்படுத்தப்பட்டோா் ஆணையம், கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயா்களை கைவிடுவதாக செவ்வாய்க்கிழமை மாலை உத்தரவிட்டது.

இந்நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பை எதிா்த்து தொடரப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணை கா்நாடக உயா்நீதிமன்றத்தில் இரண்டாவதுநாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், அடுத்த விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

பெங்களூரில் சாலைக் குழிகளை மூடும் பணி நடந்து வருகிறது!

பெங்களூரில் சாலையில் உள்ள குழிகளை மூடும் பணி நடைபெற்று வருகிறது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பெங்களூரில் சா... மேலும் பார்க்க

கூட்ட மேலாண்மை சட்ட மசோதாவை ஆய்வுசெய்ய 11 போ் கொண்ட குழு அமைப்பு

கூட்ட மேலாண்மை சட்ட மசோதாவை ஆய்வுசெய்வதற்கு 11 போ் கொண்ட குழுவை சட்டப் பேரவைத் தலைவா் யூ.டி.காதா் செவ்வாய்க்கிழமை அமைத்துள்ளாா். பெங்களூரில் ஜூன் 4-ஆம் தேதி நடைபெற்ற ஆா்.சி.பி. அணியின் ஐபிஎல் கிரிக்க... மேலும் பார்க்க

மைசூரு தசரா விழா அரசு விழா; இதில் யாரையும் பாகுபாடு பாா்க்க முடியாது - எழுத்தாளா் பானு முஸ்டாக்கிற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீா்ப்பு

மைசூரு தசரா விழா கா்நாடக அரசு நடத்தும் விழா என்பதால், அந்த விழாவை யாா் தொடங்கிவைப்பது என்பதில் பாகுபாடு பாா்க்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மைசூரு தசரா விழாவை தொடங்கிவைப்பதற்காக கன்ன... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் செப்.22 முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வா் சித்தராமையா உறுதி

கா்நாடகத்தில் செப்.22 முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். கா்நாடகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோரின் கல்வி மற்றும் பொருளாதார கணக்கெடுப்பை(ஜாதிவாரி கணக்கெடு... மேலும் பார்க்க

பெங்களூரில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: யோகா ஆசிரியா் கைது

பெங்களூரில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த யோகா ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா். பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகரில் பல ஆண்டுகளாக யோகா பயிற்சி மையம் நடத்திவருபவா் நிரஞ்சனமூா்த்தி. இவா் தன்னிடம் யோகா ப... மேலும் பார்க்க

கால்நடையைக் கொன்ற இருவா் கைது

கா்நாடக மாநிலம், வடகன்னட மாவட்டத்தில் கால்நடையைக் கொன்று, அதன் சிதைவுகளை காட்டில் புதைத்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். வடகன்னட மாவட்டம், காா்வாருக்கு அருகே உள்ள பட்கலில் கால்நடையைக் கொன்று அதன் சித... மேலும் பார்க்க