செய்திகள் :

பாலி: சுற்றுலா சென்ற இடத்தில் இறந்துபோன இளைஞர்; ’இதயம் இல்லை’ - பிரேத பரிசோதனை முடிவில் அதிர்ச்சி!

post image

பாலி தீவில் இறந்த ஒரு இளைஞரின் உடல், இதயம் இல்லாமல் சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது..

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் பாலிக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். சென்ற இடத்தில் அவர் பாலி வில்லாவின் நீர்த்தேக்க குளத்தில் இறந்து கிடந்திருக்கிறார்.

நான்கு வாரங்களுக்கு பிறகு அவரது உடல் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அங்கு நடந்த பிரேத பரிசோதனையில் அவருக்கு இதயம் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

Bali Island

இந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலியா அதிகாரிகள் இந்தோனேசியா அதிகாரிகளிடம் பதில் கோரியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

ஆஸ்திரேலியா உள்ளூர் சேனலிடம் இளைஞரின் தாயார் கூறுகையில் "இறந்த செய்தியை கேட்டு மனம் உடைந்துபோன நிலையில் இதயம் இல்லாத விஷயம் கேள்விபட்டவுடன் அது எனக்கும் மேலும் ஒரு அடியாக இருக்கிறது. அங்கே ஒரு தவறு நடந்த மாதிரி எனக்கு தோன்றுகிறது. நீச்சல் குளத்தில் அவனுக்கு ஏதோ நடந்து இருக்கிறது என்று நினைக்கிறேன்" என பேசியிருக்கிறார்.

"தடயவியல் நோக்கங்களுக்காக, அவரது இதயம் பரிசோதிக்கப்பட்டு, உடலை வீட்டிற்கு திருப்பி அனுப்பும்போது அது உள்ளேயே வைக்கப்பட்டது" என்று மருத்துவர் நோலா மார்கரெட் குணவன் தி சிட்னி மார்னிங் ஹெரால்டு செய்தித்தாளிடம் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான்: "எங்களைப் போகவிடுங்க" - காதலனுடன் போலீஸ் ஜீப் மீது ஏறி நின்று ரகளை செய்த மைனர் பெண்

ராஜஸ்தான் மாநிலம் கோடா என்ற இடத்தைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவரைக் காணவில்லை என்று கூறி அவரது பெற்றோர் போலீஸில் புகார் செய்து இருந்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.விசாரணையில் அப்ப... மேலும் பார்க்க

திருமணத்தை மீறிய உறவு: ரூ.2.1 கோடியை கொடுத்துவிட்டு திரும்பக் கேட்ட பெண் - நீதிமன்றம் சொன்னதென்ன?

திருமணம் மீறிய உறவிற்காக பெண் தொழிலதிபர் ஒருவர் 2.1 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார். ஆனால் அந்த உறவு ஓராண்டிலே முடிந்ததால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் பெரு... மேலும் பார்க்க

`காசா போரில் பாதித்தவர்களுக்காக'- சோசியல் மீடியா மூலம் ரூ.5 கோடி வசூல்; மும்பையில் சிக்கிய கும்பல்!

பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக காசா முழுமையாக உருக்குலைந்து காணப்படுகிறது. காசாவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான வேலையில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்... மேலும் பார்க்க

சென்னை: 150 ஆண்டுக்கால சேவையைக் கொண்டாடும் தியோசாபிகல் சொசைட்டி - இங்கு என்ன இருக்கிறது?

சென்னை அடையாறில் அமைந்துள்ள தியோசாபிகல் சொசைட்டி தனது 150வது ஆண்டுக்கால சேவையை நிறைவு செய்திருக்கிறது. சென்னை சலசலப்பில் இருந்து சற்றே தனித்திருக்கும் இந்த இடத்தில் பல்வேறு அடர்ந்த மரங்கள், விலங்கு மீ... மேலும் பார்க்க

``இந்தியரை திருமணம் செய்தபின் என் வாழ்வில் நடந்த 3 மாற்றங்கள்" - உக்ரைன் பெண்ணின் வீடியோ வைரல்

இந்திய இளைஞரை திருமணம் செய்த பிறகு வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என்பதை உக்ரேனியப் பெண் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார். 8 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனைச் சேர்ந்த விக்டோரியாவும் இந்தியாவைச் சேர்ந்... மேலும் பார்க்க

VGP மரைன் கிங்டம்: இந்தியாவின் முதல் நீருக்கடியில் உள்ள கொலு கண்காட்சி

சென்னையின் முதன்மையான கடல் மற்றும் நீர்வாழ் உயிர் பூங்காவான விஜிபி மரைன் கிங்டம் இந்தியாவிலேயே முதல் நீருக்கடியிலான நவராத்திரி கொலுவை பெருமையுடன் வழங்குகிறது. இந்த நிகழ்வு 21 செப்டம்பர் 2025 அன்று மால... மேலும் பார்க்க