செய்திகள் :

திருமணத்தை மீறிய உறவு: ரூ.2.1 கோடியை கொடுத்துவிட்டு திரும்பக் கேட்ட பெண் - நீதிமன்றம் சொன்னதென்ன?

post image

திருமணம் மீறிய உறவிற்காக பெண் தொழிலதிபர் ஒருவர் 2.1 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார். ஆனால் அந்த உறவு ஓராண்டிலே முடிந்ததால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் சோங்கிங்கில் உள்ள ஒரு நிறுவனத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே திருமணம் ஆன பெண் தொழிலதிபர் ஒருவர் அதே நிறுவனத்தில் பணிபுரியும் சக ஊழியருடன் நெருங்கி பழகி இருவரும் காதல் வயபட்டுள்ளனர். அந்த ஊழியரும் ஏற்கனவே திருமணம் ஆனவர்.

ஒரு கட்டத்தில் இருவரும் தங்களது துணைகளை விவாகரத்து செய்துவிட்டு இவர்கள் இருவரும் இணைந்து வாழ முடிவு செய்திருக்கின்றனர்.

விவாகரத்து பெறும்போது அந்த ஊழியரின் மனைவி, குழந்தைகளின் செலவிற்காக இழப்பீடு கேட்டிருக்கிறார். பெண் தொழிலதிபர் அந்த ஊழியருக்கு 2.1 கோடி பணமும் கொடுத்து உதவி இருக்கிறார்.

இருவரும் திட்டமிட்டபடி தங்களது உறவிலிருந்து வெளியே வந்தனர். அதன் பின்னர் ஓராண்டு காலம் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். அதன் பின்னர் அந்த உறவும் பிரிந்திருக்கிறது.

இதற்கிடையில் தான் கொடுத்த 2.1 கோடி ரூபாயை திருப்பித் தருமாறு பெண் தொழிலதிபர் அந்த ஊழியர் மற்றும் மனைவியிடம் கோரி இருக்கிறார்.

பணத்தை திருப்பி தர மறுத்ததால் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருக்கிறார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ”இந்த பணம் குழந்தையின் வளர்ப்புக்காகவும் விவாகரத்து இழப்பீடாகவும் கணவரால் மனைவிக்கு வழங்கப்பட்டதால் இதை திருப்பித் தர தேவையில்லை” என்று தீர்ப்பளித்து இருக்கிறது.

ராஜஸ்தான்: "எங்களைப் போகவிடுங்க" - காதலனுடன் போலீஸ் ஜீப் மீது ஏறி நின்று ரகளை செய்த மைனர் பெண்

ராஜஸ்தான் மாநிலம் கோடா என்ற இடத்தைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவரைக் காணவில்லை என்று கூறி அவரது பெற்றோர் போலீஸில் புகார் செய்து இருந்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.விசாரணையில் அப்ப... மேலும் பார்க்க

`காசா போரில் பாதித்தவர்களுக்காக'- சோசியல் மீடியா மூலம் ரூ.5 கோடி வசூல்; மும்பையில் சிக்கிய கும்பல்!

பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக காசா முழுமையாக உருக்குலைந்து காணப்படுகிறது. காசாவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான வேலையில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்... மேலும் பார்க்க

சென்னை: 150 ஆண்டுக்கால சேவையைக் கொண்டாடும் தியோசாபிகல் சொசைட்டி - இங்கு என்ன இருக்கிறது?

சென்னை அடையாறில் அமைந்துள்ள தியோசாபிகல் சொசைட்டி தனது 150வது ஆண்டுக்கால சேவையை நிறைவு செய்திருக்கிறது. சென்னை சலசலப்பில் இருந்து சற்றே தனித்திருக்கும் இந்த இடத்தில் பல்வேறு அடர்ந்த மரங்கள், விலங்கு மீ... மேலும் பார்க்க

``இந்தியரை திருமணம் செய்தபின் என் வாழ்வில் நடந்த 3 மாற்றங்கள்" - உக்ரைன் பெண்ணின் வீடியோ வைரல்

இந்திய இளைஞரை திருமணம் செய்த பிறகு வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என்பதை உக்ரேனியப் பெண் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார். 8 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனைச் சேர்ந்த விக்டோரியாவும் இந்தியாவைச் சேர்ந்... மேலும் பார்க்க

VGP மரைன் கிங்டம்: இந்தியாவின் முதல் நீருக்கடியில் உள்ள கொலு கண்காட்சி

சென்னையின் முதன்மையான கடல் மற்றும் நீர்வாழ் உயிர் பூங்காவான விஜிபி மரைன் கிங்டம் இந்தியாவிலேயே முதல் நீருக்கடியிலான நவராத்திரி கொலுவை பெருமையுடன் வழங்குகிறது. இந்த நிகழ்வு 21 செப்டம்பர் 2025 அன்று மால... மேலும் பார்க்க

H-1B: "ஏற்கனவே விசா வைத்திருப்பவர்கள் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டாம்" - அமெரிக்கா விளக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றன. அவரின் முடிவுகளால் அமெரிக்க மக்களே பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்... மேலும் பார்க்க