செய்திகள் :

Mohan Lal: ``சினிமாதான் என் ஆன்மாவின் இதயத் துடிப்பு'' - விருது பெறும் மேடையில் மோகன் லால்

post image

71-வது தேசிய விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.

தாதா சாகேப் விருது பெறும் மோகன் லால், தேசிய விருது பெறும் ஷாருக்கான், ஜி.வி. பிரகாஷ், ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர், `பார்க்கிங்' பட இயக்குநர் ராம் குமார் என விருது அறிவிக்கப்பட்ட அனைவரும் இந்த நிகழ்வில் பெரு மகிழ்ச்சியோடு கலந்துகொண்டு விருது பெற்றனர்.

தாதா சாகேப் விருது பெற்ற மோகன் லால் இந்த நிகழ்வில் மேடையில் பேசினார்.

Mohan Lal at receiving Dada Saheb Phalke Award
Mohan Lal at receiving Dada Saheb Phalke Award

மோகன் லால் பேசுகையில், "`தாதா சாகேப் பால்கே' விருது இந்தத் தருணத்தை பெருமையாக உணர்கிறேன். மலையாள சினிமாவின் பிரதிநிதியாக இந்த தேசிய அடையாளத்தை பெறும் இளமையான நடிகர் மற்றும் எங்கள் மாநிலத்திலிருந்து இந்த விருதைப் பெறும் இரண்டாவது நபர் நான்தான். இந்தத் தருணம் எனக்கானது மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த மலையாள திரை சமூகத்திற்கானது.

இந்த விருதை நான் மலையாள சினிமாவுக்கு செலுத்தும் ட்ரிப்யூட்டாகப் பெற்றுக்கொள்கிறேன். இந்த விருது குறித்தான அறிவிப்பு வந்த சமயத்தில் நான் மகிழ்ந்தேன்.

அந்த மகிழ்ச்சி, இதைப் பெற்றுவிட்டோம் என்ற பெருமையினால் அல்ல. எங்களுடைய சினிமா பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதை எண்ணி மகிழ்ந்தேன்.

நான் இந்த விதியை ஒரு மென்மையான கையாக நம்புகிறேன். அதுதான் மலையாள சினிமாவை வடிவமைத்த அனைவரின் சார்பாக இந்த விருதை என்னை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கிறது.

இந்தத் தருணத்திற்கு நான் ஒருபோதும் கனவு கண்டதில்லை. எனவே, இது கனவு நனவாகிய தருணம் கிடையாது.

Mohan Lal at receiving Dada Saheb Phalke Award
Mohan Lal at receiving Dada Saheb Phalke Award

இது அதைவிட மிகப் பெரிய மற்றும் ரகசியமான ஒன்று. இது என்னை மேலும் ஆழமாக பொறுப்புணர்வோடு செயல்படச் சொல்கிறது.

இந்த விருதை என் முன்னோடிகளின் ஆசிர்வாதமாக ஏற்றுக்கொள்கிறேன். இதை மலையாள திரைப்படத் துறையின் துடிப்பான உலகிற்கு அர்ப்பணிக்கிறேன்.

ஒரு நடிகராகவும், திரைப்பட ஆளுமையாகவும், இந்த கௌரவம் என்னை வலுப்படுத்துகிறது.

இது சினிமாவில் என் பற்றுதலை மேலும் ஆழப்படுத்துகிறது." என்றவர் மலையாளத்தில், "என்டைய ஆத்மாவிந்தே ஸ்பந்தனமான சினிமா (சினிமாதான் என்னுடைய ஆன்மாவின் இதயத் துடிப்பு)." என்று பேசி முடித்தார்.

`ஆப்ரேஷன் நம்கூர்' - துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை சோதனை; பரபரக்கும் கேரளா

நடிகர் துல்கர் சல்மான், நடிகர் பிருத்விராஜ் வீடுகளில் ஆபரேஷன் நம்கூர் திட்டத்தின் ஒரு பகுதியாக சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வரி செலுத்தாமல் பூட்டான் வழியாக... மேலும் பார்க்க

Drishyam 3: பூஜையுடன் `த்ரிஷ்யம் 3' படப்பிடிப்பு தொடங்கியது; உடனடியாக டெல்லிக்கு விரைந்த மோகன் லால்!

Aமிகவும் எதிர்பார்க்கப்பட்ட `த்ரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது. முதல் இரண்டு பாகங்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த மூன்றாம் பாகத்திற்கு பெருமளவில் எதிர்பார்ப்பு நிலவி ... மேலும் பார்க்க

Lokah: ``துல்கர் சல்மான் சார் என்னோட ஃபேன்னு சொன்னார்”- துர்கா வினோத் பேட்டி

நாயகியை மையப்படுத்திய படம் இதுவரை இப்படியொரு வரவேற்பையும் வசூல் சாதனையையும் படைத்ததில்லையே என திரையுலகை மிரள வைத்துக்கொண்டிருக்கிறது ‘லோகா’ (Lokah Chapter 1: Chandra). படத்தில் நீலியாக நாயகி கல்யாணி ப... மேலும் பார்க்க

Lokah: "போலி செய்திகளைப் புறக்கணிக்கவும்" - ஓடிடி வெளியீடு குறித்து தயாரிப்பாளர் துல்கர் விளக்கம்

திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் வசூலில் பெரிய மேஜிக்கை நிகழ்த்தியது. 'லியோ' படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் டான்ஸ் மாஸ்டர் சாண்ட... மேலும் பார்க்க

"பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைத்தபோது நம்ப முடியவில்லை" - மோகன்லால் நெகிழ்ச்சி

இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மலையாள நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இன்று சென்னையிலிருந்து கொச்சிக்கு வந்தார் மோகன்லால். தனக்கு விருது அறிவிக்கப... மேலும் பார்க்க

Dadasaheb Phalke Award: "சினிமாவை சுவாசிக்கும் உண்மையான கலைஞன்" - மோகன்லாலை வாழ்த்திய மம்மூட்டி

இந்திய சினிமா துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருதை மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலுக்கு மத்திய அரசு இன்று (செப்டம்பர் 20) அறிவித்திருக்கிறது.தாதாசாகேப் பால்கே:இந்தியாவின... மேலும் பார்க்க